Sunday, September 7, 2014

அன்பு..




உயிர்களில் பேதமில்லை
உணர்வுகளில் ஏதுமில்லை
நாமாக நாமுண்டு
நாமிருவர் எனும் போதும் ..

வினை கொண்ட தேசத்தில்
விலை போகும் மனிதருள்
விடியல் தேட முனைகின்றார்
விடுதலைக்காய் ஏங்குபவர் ,
எனக்கும் ஓர் இடமுண்டு
எந்நேரமும் சாவுண்டு
என் பிறப்பில் பாவமுண்டு ..

வாழ்க்கை இனித்திடும் தோழா
வா வந்து கை கோர்த்திடு
இமயங்கள் தொட வேண்டாம்
இருவருள்ளும் பகை வேண்டாம்
இதயங்கள் பகிர்ந்திடு
இருக்கும்வரை இன்புறலாம் ..

என்னையும் உண்பார்
உன்னையும் கொல்வார்
உயிரோடு மண்ணையும் மாய்ப்பார்
திண்ணைகள் தோறும்
வெட்டிகள் பேசும் மன்னர்கள் .

அதுவரை
என்னையும் உன்னையும்
என்றுமே வாழ்த்திடும்
அன்பை பகிர்ந்திட்டு
அறுதிவரை வாழ்ந்திடலாம்
இன்புற்று என் தோழா ..

No comments:

Post a Comment