Saturday, July 28, 2012

காத்திருப்பேன்




என்று வருவாய்
எழுதாத உன் காதலை
ஏழை என் இதழ்வழி
என்று எழுதி செல்வாய்
அணையாத அன்போடு
அளவில்லா ஆசைகளோடு
அணுவிலும் உன் துடிப்போடு
உன் அணைப்புக்காக காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன் ..



என்று முடிமோ ...




உன் நினைவில்
ஆடிகொண்டிருகிறது
என் இதயம்
கனமாக கனக்கும்
மணித்துளிகள்
கலையாது இருக்கும்
உன் நினைவுக் கோலங்கள்
உன் கரம் சேர துடிக்கும்
என் ஆசை மேகங்கள்
கருக்கொண்டு பொழிகிறது....
உன்னை சேராமலே
உறைந்துகொண்டிருகின்றேன் நான்
முடிவில்லாத என் வேதனை
என்று முடிமோ ...





வந்துவிடு ..





விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயரில் கலந்த உறவே ....
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்
கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு ....
கனவாய் போன
காதல் உறவின்
கதைகள் சொல்ல வந்துவிடு ....
உன்னை காண ஏங்கும்
கண்கள் அதற்க்கு
கண நேர சுகத்தை தந்துவிடு ..



Friday, July 27, 2012

தனிமை...





நகரும் மணித்துளிகள்
நரகமாய் கனக்கிறது
உன்னை அழைக்க
ஒவொரு கணமும்
என் உயிர்வரை துடிக்கிறது
உணர்வுகள் தடுக்கிறது ..
கலைந்து போகும் மேகங்களே
என் காதலும் உங்களை போல்தானோ
தேவைக்கு மட்டும் கூடி பிரிகிறதே
தனிமையை தவிர்க்க
தத்தளிக்கிறேன் ...
உன் நினைவுச்சுழல்
என் உயிர் வரை உருவும் பொழுது ....




நினைவுகள் ....



இன்று என் நினைவு
அற்றுபோய் இருக்கலாம்
என்றோ ஒரு நாள்
என் நினைவுகள்
உன்னை தழுவும் போது ..
அந்த தருணத்திலும்
உன்னை நேசித்து கொண்டிருப்பேன்


நீ



தொலைவாய் நீ
தொலைகிறேன் நான்
தொடரும் உன் நினைவுகள்
தவிக்கிறேன் நான்
எத்தனை ஆசை
எத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
அத்தனையும் புதைத்து விட்டாய்
அந்தஹாரமாய் என் மனம்
அமைதி இழந்து தவிக்கையில்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ..?
ஒஹ் நீதான் என்னை காதலிக்கவில்லையே ..



உன் மடி சாய்ந்து




அன்பே
அணு அணுவாய்
உன்னை நேசித்தவள் நான்
அனுதினம் உன்னை பூஜித்தவள்
அடங்காத ஆசைகளை ஜாசித்தவள்..
இன்று அடுத்து என்னவென்று
தெரியாத ஏக்கம் என்னுள்
இனம் புரியாத தவிப்புகள் உள்ளுள்
என் இதயத்து ஆசை எல்லாம்
ஒரு தடவையாவது
உன் மடி சாய்ந்து
என் மரணத்தை நேசிப்பதுதான் ...