Tuesday, May 29, 2012

தவம் இருக்கும் ...




அன்பே ...
உன்னோடு அருகமர்ந்து
அளவளாவி ...ஆவல்கொண்டு
ஆனந்தகதைகள் பேசவில்லை
கையேடு கை கலந்து
களிப்பினில் கூடவில்லை
மெய்யோடு மெய் சிலிர்த்து
கலவிகளில் கூடவில்லை ..
மனதோடு மனதுரசி
நினைவோடு நெகிழ்ந்துருகி
கனவோடு காதல் கதைகள் பேசினேன் ..
இந்த பூ உன் பூஜைக்கு வாராது போகலாம்
என் இதயத்து பூக்கள் ...
என்றும் உன் நினைவு பூஜைகாய்
தவம் இருக்கும் ...



No comments:

Post a Comment