Monday, May 28, 2012

உயிரையும் தருவாள்




உன் மன அறையில்
மண்டி இட்டு மன்றாடுபவள் நான்
இருந்தும்
என் மனம் ஒன்றும்
மலர் அல்ல
எனக்குள்ளும்
எண் அற்ற எதிர் பார்ப்புகள் ..
கரடு முரடானா
காட்டமான கொள்கைகள்

உன்னிடம் தினம்
கனவிலும் நினைவிலும்
ஒவொன்றாக சொல்கிறேன் ..
எதற்கும் உனிடம்
எதிர் வினைகள் இல்லை ...

உன்னை நேசிப்பவள் நான்
உன்னை பூசிபவள் நான்
சில சமயம் தூசிப்பவளும் கூட ..
இருந்தும் என் மன தராசில்
நீதான் நிறை நிலை ...

என் காதல்
ஒரு நாள் உன்னை
கனிய வைக்கலாம்
என்பால் உனக்கு
கருணையும் பிறக்கலாம்

இன்று சொல்கிறேன் கேள்
உன் மனதராசில்
அன்று என் பகுதி தாழ்ந்து
பொன் பொருள் பகுதி
உயர்ந்து
உன் மனதில்
எனக்கான இடம்
நிச்சயிக்க படுகின்றதோ
அன்று ...
நீ கேட்டால்
உயிரையும் தருவாள்
இவள் .... உன்னவள் ..
 
 
 

No comments:

Post a Comment