Tuesday, May 12, 2020

எதிலும் நீயாக ..

வா

வாள் முனையில்

என் உயிர் தடவு

போ

என் உயிர் உருவி

உடன் கொண்டு போ ..

தா

உன் இதழ் தடவும்

இனியமுதம்

இதழ்க் கடையெங்கும்

பிழிந்து ஒழுகவோர்

முத்தம் ..

எடு

என் கனிகொண்ட

கள்ளதனை

கடுகளவும் சிந்திடாது

கொடு

இறுக்கி கொள்ளும்

இரு இதயம்

இணை பிரிந்திடாத

வரம் ஒன்று ..

கேள் ..

என்னிடத்தில்

என்னை ...

மீள்

உன்னிடத்தில்

என்னை ...

வாழ்

என்னோடு

இணை பிரியாது நீ

நில்

என்னோடு கூட

எதிலும் ..

மீண்டும்

வா

தந்தெடுத்து

கொடுத்து கேட்டு மீள்

வாழ்ந்து நில்

என்னோடு

எதிலும் இவையாவும்

நீயாக ..

No comments:

Post a Comment