Tuesday, May 12, 2020

உன் நினைவு

இந்த

மழை நாளின்
கவிந்த இருள்களின்
சில்லீர்ப்புகள்
ஏனோ
உன் நினைவுகளின்
ஈர்ப்பை எய்திருக்கவில்லை ..

ஏதிலியாய்
இரவுகளை
எந்திக் கழிக்கிறேன்
உன் நினைவு முகங்களில்
என் பொழுதுக்கான
புரிதல்களின் தேடல் ..

புன்னகைக்கிறாய்
புல்லரிக்கச் செய்கிறாய்
புணர்தல் பற்றி
பொழுதெல்லாம் பேசுகிறாய்
வெட்கம் நிரம்பி வழிகின்ற
வேட்கை குரல் ததும்பி
உன்
விரல் பிடித்து கூறுகிறேன்
நீ வேண்டும் எனக்கு .

மெல்லிய தூறலென
உன் ஓரக் கண் பார்வைக்குள்
உறைந்து சிலிர்க்கிறது
என் வெட்கப் பதுமை
சிறு புன்னகை தவழ்ந்த
உன் உதட்டு சுழிப்பில்
அமிழ்ந்துகொண்டிருகிறேன் ..

இந்த இரவுகளை
உன் நினைவு முகங்களால்
நிரப்பி ...

No comments:

Post a Comment