Tuesday, May 12, 2020

பயணங்கள்..



சிலுவையோடான
பயங்கள்..

கர்த்தரிடம்
ஒரு விண்ணப்பம்
சிறிது நேரம்
நம் சிலுவைகளை
இடம் மாற்றி
சுமக்கலாமா...

காடு கடக்கும்
பயணங்கள்
கருகிக் கிடக்கும்
கனத்த உள்ளங்கள்..
வாழ்தலின் சாபமெல்லாம்
வரமாக வாங்கியபின்
வாழ்க்கையை
விமர்சிப்பதில் அர்தமில்லை..

போகிற வரை போகட்டும்..
என் வழியில்
பூக்களுக்கு இடமில்லை.

No comments:

Post a Comment