Tuesday, May 12, 2020

ஒப்பந்தம்

நிலவினை
சபிக்கிறேன்
தொலைவினில் இருப்பதாய்..

கனவுகளுக்கு மட்டுமல்ல
கற்பனைகளுக்கும்
இறகுகள் உண்டு
அது தன்னைத் தீண்டி
சுகம் காணும்...

நீர் வடியும்
மழைநாள் இலையென
நினைவுகள் வடிகிறது,
மழை
நின்றுவிட்டால் நன்று.

அழகாய் இருப்பதை
கண்ணாடியிடம்
அடிக்கடி
நிச்சயித்துக் கொள்கிறது
மனது.

தூக்கத்தோடு
ஒரு ஒப்பந்தம்
தூங்கவிடு...

No comments:

Post a Comment