Tuesday, May 12, 2020

இவள் இப்படித்தான்.

அமானுஷ்யத்தின்

அழகியல் புரிந்தவள்தான்..
ஆர்ப்பரிக்கும்
கடலாக மனது
அலைகளை புரட்டிப் போட்டாலும்
அதன் விளைவுகளை
ரசிக்கப் பழகியதால்
அமானுஷ்ய ரசிகை இவள்.

ஒர் பாலைவனப் பயணத்தின்
பல்லிளிக்கும்
பாம்புகளை
சட்டை உரித்து
சற்றும் சலனமின்றி
கடந்துகொண்டிருப்பவள்...

வாழ்கை..
அவ்வளவு இலகுவல்ல
வாழ்ந்தவரை ....
எண்ணும் அளவுக்கு
அது இயல்புகளை
பறித்திருக்கும்.

தனக்காக வாழ
தகுதியற்ற படைப்புத்தான்
பெண்.
படைத்தவன் ப்ரம்மன் இல்லயா..

யாருக்காகவாவது
இவள் தேவைப்படுவாள்
ஆனால்
இவளுக்கு தேவைகள்
இருப்பது
உணர்வதுமில்லை
கிடைப்பதுமில்லை.

ஏதோ ஒர் நம்பிக்கை
சிறு ஒளிக்கற்றை
பின்பற்றி நடந்துவிட
புரிவதில்லை
சில மணி நேரம் தான்
சிறுக சிறுக
கலைந்து விடும்.

புரிந்த பிற்பாடு
இழந்தவை
திரும்புவதே இல்லை.

இவள் இப்படித்தான்.

No comments:

Post a Comment