Tuesday, May 12, 2020

வாழ்க்கை..

நள்ளிரவை

சபிக்கின்றேன்
காலம் கடந்தும்
கண்ணீரில்
நினைவுற்றுக் கிடக்கிறது..

யாருமற்ற
பவுர்ணமி நிலவாக
வானத்தில்
அதன் இருப்பு..

இன்றளவும்
நேசித்ததால்
நேரம் தொலைத்து
தூக்கம் தொலைத்து
தொடர்கிறது..

எதுவாக இருப்பினும்
இயல்பாக கடந்திட
இன்னும்
இருதயம் முயல்கிறது.

வாழ்க்கை
இன்னும்
கற்றுக்கொடுத்தவண்ணம்
பயணிக்கிறது...

No comments:

Post a Comment