Tuesday, May 12, 2020

மகளே....

ஆடுகளோடு ஒராடாய்

நீ ஆடித் திருந்திருப்பாய்..
பாரினில் எனைப்போல் யார்
என பாடி மகிந்திருப்பாய்..
காடுகள் உன்வசமென
கால்கள் தேடி அலைந்திருப்பாய்
இந்த
காமுகர் வசம் நீ ஆக
எதை தேடிப் பதைத்திருப்பாய் ?

அண்ணண் என்று அழைத்திருப்பாய்..
மாமா என்று மன்றாடி இருப்பாய்
ஐய்யோ அம்மா...
அலறித்துடித்திருப்பாய்...
அதுகேட்டும்
இவர் குறி விறைத்ததெனில்
மனிதரல்ல மாக்கள் இவை...

மகளே..
ஆம் மகள்தான் நீ எனக்கு
உன்னை
அடிவயிற்றில் சுமக்கவில்லை
இருந்தும்
உன் முகம் பார்த்து
அடிவயிறே கலங்குதம்மா...

உன்னை பெற்றவள் சோகம்
பெண்ணாய் இல்லாது
புரிதல் கடினம்..
எத்தனை வேசியர்
எங்கும் இருப்பினும்
சிறு மலருண்ணை
கசக்கி முகர்ந்திட
என்னதான் இருந்திருக்கும்.. ?

பெண்ணாய் பிறத்தல் பாவமடி
பேதமைக்கும்
மடமைகளுக்கும் வாக்கப்பட்ட தேசத்தில்
பெண்ணாய் பிறந்ததொரு பாவமடி..

பால்வடியும் முகத்தை பார்த்து
பாலுனர்வு வடியுமென்றால்
பாரதத்தில்
ஆண்மகனாய் பிறந்ததுக்கு
அனைவரும் வெட்கம் கொள்வீர்..

யார் எவணும் வேனாம்
என் கையில் அவனை தாரீர்
அவன் ஆண்மை சிதைத்து
அகம் மகிழ்வேன் உனை சீராட்டி..

No comments:

Post a Comment