Tuesday, May 12, 2020

இரவினை காதலித்தே....

திடீரென

ஸ்தம்பித்து நிற்கிறது இரவு..

யாருமற்ற வாழ்வு
அத்துணை ஸ்வாரசியமானதல்ல..

இருளில் பயணிக்கும்
வேக வாகனத்தை போல்
விரைந்து கடந்துவிட
முடியாதது...

ஏனோ
குழந்தை பருவத்தை
யாசித்து கிடக்கிறது மனது..
தூய்மையான அன்பு
அங்குதான் சாத்தியம்...

புரிதல் என்பது
அவ்வளவு எளிதல்ல
என்னிடம் எனக்கே..

சாளரங்கள்
எப்போதும்
சுமைதாங்கிகள்...

தோள் சாய
ஓர் தோள் வேண்டும்
ஒர் பெயரற்ற உறவாய்..

சாலை விளக்குகள்
இன்னும் ஒளிர்கின்றன
இரவினை காதலித்தே....

No comments:

Post a Comment