Tuesday, May 12, 2020

சாபம்...

மழை இரவொன்றை

மன இறுக்கத்தோடு
கனந்து கடக்கிறேன்...

இருளை
அதிகம்
நேசிக்கக் கற்றுக் கொண்டவள் தான்...

அரிதாரம் கழைந்து
மனப் பறவை
சிறகுலர்த்தும்
தருணங்கள்
பின்னிரவுகள்...

யாராலும்
நேசிக்கப் படாதது
வரம்

யாவராலும்
நேசிக்கப் படுவது
சாபம்...

சபிக்கப் பட்டவர்கள் பாதையில்
பூக்கள்
என்றும் பூப்பதே இல்லை...

No comments:

Post a Comment