Tuesday, May 12, 2020

சருகு

இந்த

இரவுக்கும் எனக்கும்
என்ன பந்தம்..
நீண்டு கிடக்கிரது..

நினைவுகளை
கிறுக்குவதை
நிறுத்தி இருந்தேன்
பயனற்றது...

வலிகளே
உணரப் பாடத பொழுது
மொழிகளுக்கு
என்ன தேவை இருந்துவிடும்..?

நினைத்ததை
கிறுக்கும் சுதந்திரம்
நனைவுகளை கிறுக்கி
கொல்வதை விலங்கிட்டிருக்கிறது..

நீண்ட அமானுஷ்ய வெளியில்
இலக்கற்று அலைப்புறும்
காய்ந்த சருகென
கடந்து செல்கிரது காலம்...

இதையும்
கடந்து விடும் சருகு
ஓர் வேகமான காற்றோ
சாலையோர ஊர்திகளோ
கனன்று கொல்லும் தீ காங்குகளோ
இரக்கப்பட்டு உதவலாம்.

No comments:

Post a Comment