Tuesday, May 12, 2020

தீர்த்துவிடு...

இன்னும்
என் காலைகள்
விடியாதிருக்கிறது
உன்னோடு...

இரவுகளில் நனைந்ததை விட
காலைகளில்
உன் மழை வீரியமானவை..
அதில் மூழ்குவது
முழுமைதான்..

இருள்ப் பறவையென
உன் இரு கைகளுக்குள்
அடங்கி
மார்பில் புதைந்து கிடக்கிறேன்
இன்னும்...

பின் வளைவுகளில்
உன் அழுத்தங்களில்
மீண்டும் மூண்டு
கொ(ல்)ள்கிறது தீ..

நான் திரும்பிவிடும்
கணங்களில்
நீ நிராயுதபாணியாகலாம்..
வா திரும்புமுன்
எனை தீர்த்துவிடு...

No comments:

Post a Comment