Tuesday, May 12, 2020

என்னோடு நீ இருந்தாய்.

அந்த நாட்கள்

மிகவும் ரம்மியமானவை..
என் விடியல்களில்
உன் பெயர்
எழுதி இருந்த
நாட்களவை...

தினமொரு நாளாய்
புதிதாய் பிறந்த
மகிழ்வோடானது
அந்த நாட்கள்..
நேசித்தலின்
இறுக்கங்களோ
சில விலகுதலின்
நெகிழ்வுகளோ
மனதை பிறழ்வாக்கா
நாட்களவை...

வாழ்வோடான
பற்றுதல்களை
கற்பித்து தந்த
பொழுதுகள் அவை...

யாரோடும் ஒத்துவராத
உடன்படாத எண்ணங்கள்
சிந்தனைகள்
ஆசைகள் தேவைகள்
அனைத்துக்குமான
வடிகாலாய் வாழ்ந்த
நாட்கள் அவை...

தூரங்கள் தொலைத்து
என்
தூக்கங்களோடும்
நீ
விலகாத நாட்கள் அவை..

ஆம்
அந்த நாட்கள் மட்டும்தான்
ரம்யமானவை..
என்னோடு நீ இருந்தாய்.

No comments:

Post a Comment