Tuesday, May 12, 2020

நானும் உன் நினைவுகளும்...

இந்த

மழைக்கால இரவின்
நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
விடிவிளக்கின்
அசைவுகளென
நானும்
உன் நினைவுகளும்...

எங்கிருந்தாய்
எப்படி
எனனுள் வந்தாய்
எப்படி விலகினாய்...

விடைதெரியாததாகவே
இன்னும்....

அதீத வெல்லமென
அதீத அன்பும்
தெவிட்டிவிட
கூடுமாம்..

பிரிவின் வலிகள்
நிரந்தரமற்றவை ஆகலாம்
உன்னைப்போல் எனக்கும்
உறவென்று ஆகிவிட்டால்
ஆனால் ...

அவ்வளவு எளிதல்ல
உன்னிடத்தை
மேவுவது..

மெல்லிய காற்றில்
அசையும் விளக்குகளென
உன் நினைவுகளில்
அலைகிறது மனது
இங்குமட்டும்....

No comments:

Post a Comment