Friday, June 1, 2012

வா வந்துவிடு ....




உலகுக்கெல்லாம் இருள்
என் உணர்வுகளுக்குமட்டும் வெளிச்சம்
உல்லாசமாய் ஊரைசுற்றிய பறவை
உன்னால் உன் நினைவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டு ...
சித்திரவதைப்படுகின்றேன் ....
 
உன் நினைவுகளை சுமக்கும் என் இதயம்
எனக்கு கட்டுபட்டாலும்
உன் நிகழ்வினை சுகிக்கும் கண்கள்
உன்னை உன் ஸ்பரிசத்தை
உறவாட கேட்கின்றன ....
 
 
எத்தனை நாள்
கனவிலே கூட ...?
காதல் களிப்பிலே தேட .. ?
வா வந்துவிடு ....
உன் உதடுகளால்
என் உயிர்வரை வாங்கு ...
உன் உரிமைகளை
எடுத்திடு இங்கு ....