Wednesday, July 17, 2013

என்றும் காதலோடு ...


 
பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..

உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....

என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......


நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...

இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
என்றும் காதலோடு ...

சிதறல்கள்

 

புரியாத புதிராக
புதைந்துகொண்டே
போகிறது என் காதல்
பூவாய் காதிருந்தும்
புழுதியில் புரளும் வரமோ ..
புன்னகைக்க முயற்சிகின்றேன்
புரியாத உன்னை நினைத்தல்ல
புரிந்தும் புரியாத என்னை நினைத்து

உனக்கான என் எண்ண சிதறல்கள்
எண்ணிலடங்காமல் என்னை சுற்றி
எதிலும் குறைவில்லை
உன் அலட்சியங்களில்
அன்றாடம் சாய்ந்து கொள்வதிலும்தான்
அன்பே அசையாத காதல் என்னிடம்
அநியாயம் பன்னுகின்றாய்
அனுதினம்...........

பித்தனடி

 

வெட்ட வெளியில்
 மெல் ஒளி உமிழும்
ஒற்றை நிலவென
கற்றை கரு முகில் பிரித்து
தொலைந்த தன் காதலனை
பூமியெங்கும் தேடுகிறாள் ..

காதல் பறவைகள் என இணைந்து
உறவுகளின் விலங்குடைத்து
காவியம் பல புனைந்து
கடந்து சென்ற நாட்களின் சுவடுகளில்
பொதிந்த பூக்கள் எல்லாம்
முட்களாய் மாறி
முனைகளை களம் இறக்குகிறதே ..

தினம் தினம் போர்க்களம்
திகட்டி விட்டது அவனுக்கு
விடுதலை வேண்டும் என்று
விண்ணப்பம் கோருகிறான்
விலையாக எது வேண்டும்
விலை உயர்ந்த கார் ?
விண் மீனென மினுங்கும்
அவர்கள் கனவில் கட்டி எழுப்பிய வீடு ?
காலமெல்லாம் உக்கார்ந்து சாப்பிட
ஒரு தொகை பணம் ?
எதுவேண்டும் விடுதலைக்கு ?

வார்த்தையின் வீரியத்தில்
தழுதழுத்த கண்களின் வழி
உயிர் ஒழுகி ஓடி விடுமோ
ஒருபக்கம் திரும்பி நின்று
ஒற்றை விரலால் உள் நிறுத்தி
சட்டென திரும்பி
சடுதியாய் ஒன்று சொன்னாள் ..

பிச்சையாய் இடும் பொருள் வேண்டாம்
என்னிடம் பித்தனாய் நீ இருந்த
அந்த பல நூறு நாட்களில்
பதினைந்து நாள் வேண்டும்
தந்துவிட்டு செல்
போதும் என்றாள் .

என்ன இது புது குழப்பம்
இருந்தாலும் சம்மதித்தான்
விடுதலையின் காற்றென
அவன் விரும்பும்
விவாகரத்து உந்த ..

நாள் ஒன்று நாளிரண்டு
நாளைந்து நாள் எட்டு
எட்டி நின்ற கணவன்
காதலனாய் மாறிவிட்டான்
எந்த கவலைகள் அற்று
கனவுகளின் எல்லைகளை அடைந்தார்கள்
சண்டைகள் இல்லை
சமாதானத்தின் அவசியம் இல்லை
விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டார்கள்
அன்றில்களாய் ஒன்றிய பொழுதெல்லாம்
பின்னாளின் அவலங்களை
மனதுக்குள் மறு பரிசீலனை செய்து
தவறென்று கண்டேதெல்லாம்
தனியாக பிரித்தெடுத்து
திருத்தங்களுக்கு தீர்வு கண்டார்கள் .

வானம் வண்ண மயமாகியது
வாழ்க்கை இன்பமயமாகியது
விட்டுக் கொடுப்பதால்
கெட்டுப் போவதில்லை
விழுதுகள் பலம் பெறுகிறது
உணர்ந்தான் உவகை கொண்டான்

பதினைந்து நாள் முடிவில்
பத்திரத்தை கிழித்து
பாசல் இட்டு பாவைக்கு பரிசளிக்க
பட்டுப் புடவை ஒன்றுடன் நாடிய பொழுதில்
கூடை விட்டு குருவி பறந்து
நெடு நேரம் தொலைந்திருந்தது
அவனுக்காய் ஓர் மடல் ..

அன்பே மன்னித்துவிடு
அரைமாதம் உன்னுடன்
அணுவணுவாய் வாழ்ந்துவிட்டேன்
உன்னை பிரிய முடியவில்லை
உயிரை பிரிகிறேன் - உன்னவளாய் .

பூமி அதிரவில்லை பூகம்பம் வரவில்லை
தரை பிளந்து தன்னவளை
கணவனாய் இருந்து
காலனிடம் சேர்த்த தன்னை வைதான்
எங்கு சென்றாய் என் நித்திலமே
நித்தம் உன் நிழலில் நீண்ட என் ஓய்வுகள்
உனிடம் நான் இன்னும்
பித்தன் என்பதை சொல்லவில்லையா ?
விட்டுப் பிரிகையில் வீழ்ந்திடும் என் பார்வை அம்பு
உன் வீணான எண்ண போக்கை வீழ்த்தவில்லையா ?
கட்டிலும் களிப்பிலும் கட்டுண்ட வேளையில்
காமம் மீறிய என் காதலை சொல்லவில்லையா ?

பித்தனடி நான் உன் பித்தனடி
உன் பிரியம் வேண்டுமடி
உள்ளம் வெடிக்கும் உன் பிரிவை
ஒரு அசைவால் தன்னும்
சொல்லிட விரும்பலையோ ?
சொல்லி என்ன ஆகும் என்று நினைத்திருப்பாய்
சுரணை கெட்ட ஆண் பிள்ளை தானே இவன்
எங்கு செல்வேன் ? என்ன செய்வேன் ?
என்னையும் அழைத்துவிடு
இனியொரு ஜென்மம் கொண்டு
உனக்கு தாசனாய் வாழ்ந்து முடிக்க ....

உங்கள்


ஒவொரு வார்த்தையின் விளிம்பிலும்
உருகி வழியும் உங்கள்
புரிதலின் ஊனத்தின் வாடை
யாருக்கும் உவப்பானதாய் இருப்பதில்லை .

விளங்க முடியாதா
விளங்கிக் கொள்ள முடியாத
ஏன் விளங்கி கொள்ள விரும்பாத
ஆதிக்கத்தின் பிடியில்
அடங்கி அமிழ்ந்து ததும்பி
வெளி வரும் உங்கள் வார்த்தைகள்
துப்பிய எசில்களாய் அருவெறுப்பாக ..

கோடுகளாலும் புள்ளிகளாலும்
இணைந்த கோலத்தின் மீது
ஊரும் சர்பெமென
உங்கள் அசைவுகள்
விஷத் தன்மையானதாகவும்
விரும்ப முடியாததாகவும் இருக்கிறது ..

நெடுந் தூர பயனமொன்றின் கை கோர்ப்பில்
அடிக்கடி சுரண்டும் நகங்களின் இடுக்கில்
உறையும் இரதங்களின் துர் நாற்றமென
உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மணக்கிறது ..

வெற்றிடங்களை நிரப்பும்
காற்றின் துணுக்குகளை
கிழித்து வரும்
உங்கள் குரோதப் பார்வைகள்
உங்கள் மேல் கொண்ட நம்பிகையின்
ஆயுளை அடித்துச் செல்வத்தையும்
தவிர்க்க முடிவதில்லை ...

அலரும் மலரின்
மென்மையை ஸ்பரிசிக்க துடிக்கும்
உங்கள் மனங்களுக்கு
அதன் மேன்மைகள்
என்றுமே உவப்பானாதாக
இருக்கப் போவதில்லை

எனவே விடை பெறுங்கள்
உங்களுக்கென தனியானதொரு
தடம் காத்திருக்கலாம் .

இப்படிதான் வாழ்கிறது மனிதம்

 

மனிதம் கீறும்
மனிதக் கத்திகளின்
முனை தடவி ஒழுகும் குருதி
ஆளுக்கு ஒரு நிறம் காட்டவில்லை ...

இறப்பின் பகை கொளுத்தி
எரியும் தீக் காங்குகள் எதுவும்
ஜாதிக்கு ஒரு சாம்பலைத் தருவதில்லை ..

உடல் அழுகி ஒழுகும் ஊனத்தின் மேல்
புழுத்து நெளியும் துர் நாற்றப் புழுக்கள் என
ஜாதி , இன , மத வெறிகள்
யாராலும் தீண்ட விரும்பப் படாதவையாக இருக்கிறது ..

மதத்தை வளர்கிறேன் என
மனிதனை கொல்வதும்
இனத்தை வளர்கிறேன் என
மொழியை கொல்வதும்
மொழியை வளர்கிறேன் என
இனத்தை அளிப்பவர்களும்
ஏனோ மனிதம் கொன்று
மற்றவைகளை வளர்கின்றனர் ..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
இதை நன்றே சொல்கின்றனர்
நரம்பற்ற நாக்கென்று
வரம்பற்று பேசுகின்ற
நாடி தளர்ந்திட் கிழ பழசுகளும்
ஜாதி வெறிகொண்டு பாயும் நாய்களென ..

மனிதம் விற்று மதத்தை வாங்குபவனே
தன் புனிதம் விற்று வெறியை வாங்குகிறான்
இறைமை விற்று இனத்தை தாங்குபவனே
அவன் முறைமை அற்று முடிவை தேடுகிறான்

தெருவெங்கும் மேடை கட்டி
உருவமிலானுக்கு ஏன் ஒன்பது கோயிலென
ஓலமிடும் அவன் வீட்டில் தங்கத்தில் சாமி சிலை ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என தாரணி முழங்க கூவுகிறான்
அவன் வீடில் ஜாதிக்கு ஒரு கோப்பை ..
யாதும் ஊரே யாவரும் கேளீர்
நீயும் நானும் ஒருதாய் பிள்ளை என்கிறான்
பின்னால் இவன் மதராசி என்கிறான்

இப்படிதான் வாழ்கிறது மனிதம்
இதில் எப்படி ஐயா வாழும் இங்கே புனிதம் ?

ஜாதீ

 

அன்பெனும் ஓடையில் கலந்த
காதல் பண்பெனும் தேன் குடித்த
ஜோடி வண்டுகள் இரண்டு
வாடி கிடந்ததே கிளர்ந்து ...

அகிம்சையும் வீரமும்
அறவே அற்றவர்
வெறும் மேடைப் பேச்சாய்
கொண்டவர் வெறிக்கு
காதல் கொண்டவர் ஆனார் இரை ..

யார் கண்டு பிடித்தது ஜாதி
யாரை கொண்டு புணர்ந்தது ஜாதி
உனக்கும் எனக்கும் குருதி சிவப்புதான்
உனக்கும் எனக்கும் இருதயம் இடப் பக்கம்தான்
நீயும் நானும் உண்பது சோறுதான்
நானும் நீயும் சுவாசிப்பது ஓர் காற்றுத்தான் ..

வாழும் பூமி சாதி பார்க்கவில்லை
வீசும் காற்றும் சாதி பார்ப்பதில்லை
விளையும் விதை சாதி பார்கவில்லை
வேரும் ஓடும் நீரும் உதிரும் இலையும்
ஒன்றுமே சாதி பார்ப்பதில்லை
இதை எல்லாம் நம்பி வாழும்
நீ மட்டும்தான் சாதி பார்க்கிறாய் ..

உயிர் இணைந்த பறவைகளின்
உடல் பிரிக்க வைத்தீர் ஊர் தீ
இன்று உயிர் பிரிந்த
பறவை ஒன்று
உனக்கு வைக்கும் தீ ..

நாய்களுக்கும் உண்டாம் காதல் சுதந்திரம்
பறக்கும் பறவைக்கும் உண்டாம் கலவிச் சுதந்திரம்
ஏன் பேய்களுக்கும் உண்டாம் பூர்வீக பந்தம்
கேவலம் ஆறறிவு ஜீவன் மனிதர்க்கு இல்லையே
அவன் வாழும் சுதந்திரம் ..
மனிதனாய் பிறத்தலிலும் நாய் பேய் மேலடா
நர பலி கேட்கும் சாதி சாமிகளுக்கு
இறுதிச் சடங்கு ஒன்று செய்யடா ..

கரும் புலிகள்

 

நேரம் குறித்து
நிமிடம் குறித்து
காலம் குறித்து
உயிரில் தீ மூட்டி
காலனை அழைக்கும்
கர்ம வீரர் தாம் கரும் புலிகள்

கொண்ட கொள்கைக்காய்
ஈகம் ஈயும் தியாகம் கொண்டவர்
தாகம் தன்னில் தாயகம் அடக்கி
தலைவனை நினைத்து
வெடித்து சிதருவர் ..

ஜாதிக்காக பலி எடுக்கும்
ஈனர்கள் வாழும் பூமியில்
தன இனத்துக்காக
தன்னை உயிர் பலி கொடுக்கும்
உத்தம ஆத்மாக்கள்

இன்று நீ நாளை நான்
இதுதான் இவர்கள் தாரக மந்திரம்
இன்று நான் இல்லையே என
ஏங்கும் இவருள்ளம் கண்டு
உறுதி கண்டு உருகி நெகிழும்
பாறைகள் பலவுண்டு ...

செம் பிழம்பாய் வெடித்து
தீயின் நா சூழ்ந்து
திக்கெட்டும் பகவரை
திகில் சூழ
தில்லாக புறப்படுவார் இவர் ...

மரணம் ஒரு நாள் வரும்
அதை மகத்தானதாய் மாற்றும் திடம்
மறவர் இவர்களுக்கே உரிய வரம்
மாவீரரான ஆன கரிய புலிகளே
உங்கள் மா வீரம் போற்றும் நாள் வரும்
உமை மனம் நிறைய வாழ்த்தும் ஊர் சனம் .

சண்டை

 
Photo: சண்டை 
****
எதுவும் கிறுக்கப் படாத
வெற்றுத் தாள் ஒன்றில்
உன் எண்ணங்களும்
என் வண்ணங்களும்
மோதிக் கொள்கின்றன ..
பிரசவிக்கும் எதுவோ ஒன்றை
உனக்கு சொந்தம் என்கிறாய்
நான் எனக்கு சொந்தம் என்கிறேன்
நமக்கு சொந்தம் எனும் எண்ணம்
வருவதாய் இல்லை ..

உன் வார்த்தை வருடலுடன்
ஆரம்பாமாகும் என் பொழுதுகள்
வாடி வதங்கி போகிறது
வார்த்தைகளின் அனல் வீச்சில்

உதிர்க்கப் படாத
உன் மென்மைகளை தேடி
முகப் புத்தகத்தின்
முகங்களை திருப்பினால்
ஐயஹோ அங்கும் அடிதடி
பிரபலங்கள் சண்டை
பிரபலமாக சண்டை
பிரபலத்துக்காக சண்டை
பிய்ந்து விடுகிறது .....

திடீர் என எங்கிருந்தோ வருகிறாய்
எதிர் பாராமல் பேசுகிறாய்
உன் பேச்சின் ஆரம்பம்
உன் பேச்சின்  முடிவு வரை
ஒரு பிரளயத்தை
எதிர் பார்க்க தவறுவதில்லை மனது ..

சில சமயங்கள்
குழந்தை என மனது தேம்பி அழுகிறது
பல சமயம் குமரியென சிலிர்த்து விறைக்கிறது
ஆனால் எல்லா சமயங்களிலும்
ஏங்கித் தவிக்கிறதே ..
எதுவாக இருந்தாலும் பேசிவிடு ..

ஒரு அதிகாலையின் நீட்சிகாக
ஏங்கும் பனித் துளியென
ஒரு சூரியப் பார்வையின் தீண்டலுக்காக
காத்திருக்கும் சூரிய மலர் என
ஒரு சில மென்மைகளுக்காய்
மெது மெதுவாய் ஏக்கம் படர்கிறது . 

எதுவும் கிறுக்கப் படாத
வெற்றுத் தாள் ஒன்றில்
உன் எண்ணங்களும்
என் வண்ணங்களும்
மோதிக் கொள்கின்றன ..
பிரசவிக்கும் எதுவோ ஒன்றை
உனக்கு சொந்தம் என்கிறாய்
நான் எனக்கு சொந்தம் என்கிறேன்
நமக்கு சொந்தம் எனும் எண்ணம்
வருவதாய் இல்லை ..

உன் வார்த்தை வருடலுடன்
ஆரம்பாமாகும் என் பொழுதுகள்
வாடி வதங்கி போகிறது
வார்த்தைகளின் அனல் வீச்சில்

உதிர்க்கப் படாத
உன் மென்மைகளை தேடி
முகப் புத்தகத்தின்
முகங்களை திருப்பினால்
ஐயஹோ அங்கும் அடிதடி
பிரபலங்கள் சண்டை
பிரபலமாக சண்டை
பிரபலத்துக்காக சண்டை
பிய்ந்து விடுகிறது .....

திடீர் என எங்கிருந்தோ வருகிறாய்
எதிர் பாராமல் பேசுகிறாய்
உன் பேச்சின் ஆரம்பம்
உன் பேச்சின் முடிவு வரை
ஒரு பிரளயத்தை
எதிர் பார்க்க தவறுவதில்லை மனது ..

சில சமயங்கள்
குழந்தை என மனது தேம்பி அழுகிறது
பல சமயம் குமரியென சிலிர்த்து விறைக்கிறது
ஆனால் எல்லா சமயங்களிலும்
ஏங்கித் தவிக்கிறதே ..
எதுவாக இருந்தாலும் பேசிவிடு ..

ஒரு அதிகாலையின் நீட்சிகாக
ஏங்கும் பனித் துளியென
ஒரு சூரியப் பார்வையின் தீண்டலுக்காக
காத்திருக்கும் சூரிய மலர் என
ஒரு சில மென்மைகளுக்காய்
மெது மெதுவாய் ஏக்கம் படர்கிறது .




 

கோமாளி.

Photo: ஷபா இந்த கோமாளி தொல்லை தாங்கலை என்னபத்தி கவிதை எழுத்து என்ன பத்தி கவிதை எழுதுன்னு சொல்லி என்ன டாச்சர் பண்ணிச்சு சரி ஆசப் படுறாங்க காசா பணமா கவிதை தானே அப்டின்னு எழுத ஆரம்பிச்சேன் - மிடில 
********
பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும் 
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள் 

பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும்
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள்

எதிரி


ஒவ்வொரு சொல்லாடலின் விளிம்பிலும்
ஒட்டி உலர்ந்து கொண்டு தவிக்கிறது
நட்பின் பிரியாவிடை இதழ்கள் ..
மன்னிப்பின் கரங்கள்
நீண்டு நெடுந்தூரப் பயணத்துக்கு காத்திருந்தாலும்
நிகழ்ந்துவிட ஒரு நிகழ்வு
எட்ட முடியாத இடத்திற்கு
உன்னை அழைத்துச் சென்று விட்டது .

எதிரி என்ற ஸ்தானத்தில்
உன்னை அமர்த்தி ஊர்வலம் வர
உள் நெஞ்சம் விரும்பாத வேளையிலும்
நீ அமர ஆசைப் படும்
சிம்மாசனத்தை உணகளிப்பதே
என் நட்பின் இலக்கணம் என கொள்கிறேன் .

அனுதினமும் அருகிருந்து
நீ அனுமானிக்க கூடிய
குதர்க்க விளப்பங்களுக்கு
விளக்கம் சொல்லி ஓய்வதைவிட
அங்கேயே இரு ..

தீண்டப் படாத ஒரு மலர் என
வாசனை இல்லாத ஒரு புஸ்பம் என
தேன் கொடுக்காத ஒரு பூவென
என் முழுமைகள் ஓரம் கட்டப் படுகிறது உனக்கென,
அனைத்தும் கழுவித் துடைத்த
தென்றல் ஒன்று உன்னை கடந்து செல்லட்டும்
காலம் உன் கருத்தை மாற்றும் வரை
தூரமாகவே இரு எதிரியாய் ...
காத்திருப்பேன் அதுவரை
இந்த எதிரி தோழியாய் .

கனவுகளுடன் தற்காலிகமாய் கதியற்றவள்

Photo: வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய்  இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு  வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள் . 

வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய் இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

.
கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள்

சாபம்

Photo: சாபம்
*****
மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன்  சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம் 

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன்  உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி  விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை 
செந்  தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம்  ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும் 
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன் சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம்

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன் உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை
செந் தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம் ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும்
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

மனது

Photo: மனது
****
உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது 
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..

உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..

வலி



 
வழி எங்கினும்
முறிந்து தொங்கிய வண்ணம்
இன்னும் அதன்
பச்சை படர்ந்த கிளைகள் ..
அதன் இருப்பின் இழப்பை
நிச்சயித்து ஓங்கி வளர்கிறது மரம் ..

பல நிச்சயங்கள்
பல பரீச்சயங்கள்
இழப்புகளின் முகவரியில்
எழுதிச் செல்கிறது
வலிகளின் வரிகளை ..

நேற்றுவரை அருகருகே இருந்து
அனைத்து கதைகளையும்
பேசி மகிழ்ந்த
அந்த மரத்தின் கிளை
தன் பிரிவின் தழும்புகளை
அந்த மரத்தில் எழுதிச் செல்ல
எந்த நொடியும் காத்திருக்கிறது ..
பிரிக்க முடியாத
பிரிக்க விரும்பாத
அதன் இருப்பு ஏனோ
பார்பவருக்கு எல்லாம்
பரிகாசமாய் இருந்தாலும்
பற்றுக் கொண்ட கிளைக்கு
அது கொண்ட பாசம் மட்டுமே வலிக்கிறது ...

உதிர்ந்து விட ஒவொரு கணமும்
உருக் குலைந்து உருகும் கிளை
அதன் உளம் கவர்ந்த மரத்தினுக்கே
உக்கி உரமாக காத்திருக்கிறது
அதன் உளம் கவர்ந்த உயிருக்காய் ..

புனிதம் ..


Disabled child in a wheelchair 
 
வான்வெளியின் வண்ணங்களை
வாரித் தழுவும் மேகங்களை
ஊன் தடவும் பேறு பெறவில்லை
எனினும் பெங்குவின் சாதனைப் பறவை ..

ஓங்கி வளர முடியாத பொழுதும்
ஒரு கிளை பிடித்து தான் பரவி
தளிர்திடும் முசுட்டை கொடுக்கும்
பல நோய் நிவாரணி ..

ரெட்டைக் கிளையோடு பிறந்த பனை
பழம் தரத் தவறியதில்லை
ஓட்டிபிறந்த வாழை
சுவை தர மறுத்ததில்லை

மாறுதல்களோடு காணும்
மனிதன் வணங்கும்
இறைவனும் சிங்க முகனாம்
மச்ச அவதாரமாம்
அவர்கள் எச்சங்களாய் பிறந்த
எம்மவர் எல்லாம்
இறைவன் அன்றோ ..

புலன் ஒன்று இழந்து
புறம் தன்னில் தவழ்ந்தாலும்
புலனெங்கும் அறிவு மயம்
இவர்கள் அகம் எங்கும் அன்பு மயம் .

இழந்தவைகளை நினையாது
இருப்பவைகளை வாரி வழங்கும்
இவர்கள் இருதயம் வேண்டும் ..
கறை ஒன்று படியாது கரம் கொண்டு
தலை நீவும் கணம் ஒன்று
இவர்கரம் தன்னில் பெற வேண்டும் ..

மழை நீர் காணா
புனிதம் இவர் கண்ணீர்
மனம் தான் சோர்வுறா
தீரம் இவர் நெஞ்சம் ..
இறைவன் குடியிருக்கும்
இனிய ஆலயம் இவர்கள் இதயம்
ஒருமுறை உட் புகுந்து பார்
எங்கும் காணா
இனிமையும் அமைதியும்
இயல்பில் இணைந்திடும் .

உன் தோழியாக நான்




ஒவொரு நிமிடத்தையும்
நீ எனக்காகவே செதுக்குகின்றாய்
உன் பக்கங்கள்
புரட்டப் படும்போதெல்லாம்
என் பாதிப்பின் வடுக்கள் பதுங்குகிறது
எட்டி நின்று கை குலுக்கும்
என் எண்ண அலைகளை
சட்டென்று கட்டிப் போடுகிறாய்
ஒரு புள்ளியில் .

எதற்கும் அடங்காத
குதிரையின் கடிவாளங்கள்
உன் கைக்கு சொந்தமாகவேண்டும் என
உன் ஒவ்வொரு நகர்விலும்
உணர்த்துகிறாய் ..

எனக்காக சுவாசிக்கும்
எனக்காக வாசிக்கும்
எனக்காக வசிக்கும்
உன் எண்ணங்களுக்கு சொந்தமாக
ஒரு வண்ணக் கிளியை தேடுகிறேன்
உன்னை வட்டமடிக்க
உன் வளங்களை வாரி கொள்ள

எத்தனை காலம்
என் இதயத்தின் அருகில்
காவல் இருப்பாய்
இரவல் கேட்கிறார்கள்
கொஞ்சம் இளைப்பாறி போக ..
கிளைகளற்ற மரம் இது
கிள்ளைகள் பாடா மரமிது
கிளர்சிகளில்லா அசைவிது
இருந்தும் ஒரு பாலைவனத்தின்
பாதுகாக்கும் காவல் என நீ

எனக்காக காவல் காக்கிறாய்
எனக்காக கண்ணீர் சிந்துகிறாய்
எனக்காக கற்பனை காண்கிறாய்
இது எதற்கும் தகுதிகள் அற்றவளாய்
உன் தோழியாக நான் .