Sunday, June 3, 2012

ஆயுள் கைதி....




உன்னை
என் மனச் சிறையில் வைத்தேன்
ஆயுள் கைதியாய் ...
உனக்கான சித்தரவதை
அங்கே ஆரம்பம் ..
உனக்கு பிடித்ததாய்
எனக்கும் பிடிப்பதாய் ....
என் ஆயுள் தீர்ந்தாலும்
உன்னை சேரும்
ஆசைகள் நீங்காது...
மறுபரிசீலனைக்கு இடமில்லை
மரணம்வரை ஆயுள் கைதிதான் நீ...
என் மனசிறையில் ....
 
 
 
 

வா ...


இலக்கணம்

எந்தன் இதய கரம் பிடித்து
என் வாழ்வின் இலக்கணம் ஆனவனே
இறுதிவரை மாறாமல் இருந்துவிடு
உன்னோடு இணையும் வாய்ப்பை இழந்தாலும்
உண் நினைவோடு வாழ்ந்திடுவேன் ...


தூது

உன்னிடம் தூது சொல்ல
என்னிடம் தோழி இல்லை
என் கவிதையே தூது...
கடுகதியில் வந்துவிடு ...