Thursday, March 28, 2013

நம்பிக்கை

 


தெருவோரமாய்
ஒரு ஒற்றை காகிதம்
காற்றின் திசை எங்கும்
பறந்து கிழிந்து
ஓரங்கள் சிதைந்து
ஒழுக்குகளில் நனைந்து
இன்னும்
காற்றின் திசைக்கு ஈடு கொடுப்பதற்காய்
தன்னை தயார் செய்தவண்ணம் படபடக்கிறது ...

அது இறைவனுக்கு எழுதபட்ட
வேண்டுதல் கடிதமாய் இருக்கலாம்
தலைவனுக்கு தொண்டன் எழுதிய
தயை நிறைந்த கடிதமாய் இருக்கலாம்
மகனுக்கு தாய் எழுதிய
வயோதிப விண்ணப்பமாய் இருக்கலாம்
காதலனுக்கு கொடுபதட்காய்
பலகாலமாய் காத்துகிடந்த
காதல் மடலாக இருக்கலாம்
நிந்திக்கப்பட்டு
நிராகரிக்கபட்டு
வஞ்சிக்கப்பட்டு
கிழித்து எறியப்பட்ட ஒரு நகலாக இருக்கலாம்

இன்னும் அது வாழத் துடிக்கிறது
காற்று ஓய்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்