Tuesday, April 29, 2014

தனிமைகள் ...



இந்த இரவின் நீள்தலில்
எங்கும் விரவிக் கிடக்கிறது
தனிமைகள் ..

இமைகள் தீண்டப் படாமலே
இழந்து கிடக்கிறது
உறக்கத்தை ..

நினைவுகள்
தொலைவுகள் நோக்கிய
அதன் பயணத்தை
இனிதே நடத்தி சோர்கிறது ..

எந்த வேளையும்
தன்னிலை மீறக் கூடிய
கண்ணிமை வழி
நீர்த்துருத்தல்கள் ..

விடிந்துவிடாதா ..
இது முடிந்துவிடாதா ...
சாதலிலும் வாழ்தல் மேல்
உன் வலிகளை சுமந்து ..

உறக்கங்களுடன்
எந்த உடன்பாடும்
நிறை பெறவில்லை
தனிமைகளின் நீள்தல்
தன்வசமாக்கி
தொடந்தவண்ணம் ...