Sunday, November 11, 2012

காதலன்

~girl in the dark~ 


 அந்தி வானத்தின்
ஒளிப் பிழம்பை எல்லாம்
அருவமாய் அமர்ந்து
இருள் உறிஞ்சும்
மாலைக்கு அடுத்த பொழுது ..
மன வீட்டுக்குள்
பல மகரந்தங்கள் கருக்கொள்ளும்
மந்தகார பொழுது
மயக்கங்களையும்
கிறக்கங்களையும்
அள்ளி தெளிக்கும்
மருள் பொழுது ....

அடுத்தடுத்து வரும்
மெகா சீரியலில்
மனங்கள் எல்லாம்
மௌனித்து மயங்கி நிற்க
இவள் மனது மட்டும்
அந்த இனிய பொழுதுக்காய்
ஏக்கத்துடன் காத்திருந்தது ...

நிமிடத்துக்கு ஒரு தடவை
இல்லை வினாடிகளுக்குள் பலதடவை
பாய்ந்து மீண்டது கண்கள்
படிகட்டுகளில் பரிதவிப்போடு
மணி எட்டடித்து ஓய்ந்தது
எதோ ஓர் சலசலப்பு
உட்கார்ந்திருந்தவள் மனதில்
உலைகளத்தின் தகிதகிப்பு

தன்னை மறந்து
தட தடத்து துடிதுடித்த
மனதை கைபிடித்து அடக்கியவண்ணம்
விரைந்து வந்தாள்..
மொட்டை மாடியும்
அவள் கண்ணுக்கு
மொட்டையாய் தெரிந்தது சிலகணம்
வந்த வேகத்தின் நிலை தாளாமல்
எம்பி தணிந்த மார்பும்
ஏக்கம் கலந்த கண்களும்
இங்கும் அங்கும்
தேடி சலித்து .....

சட்டென மூர்க்கம்
அவள் தாவணி தீண்டியது
மூர்க்கமாய்
பெண்மையின் முகவரிகள் தேடியது ...
ஏக்கமாய் சில இடதில்
தேக்கங்கள் புரிந்தது ...
முழுமைகள் காத்த
முந்தானை ..
முணுமுணுத்து சரிந்தது ..
பெண்மைக்கான கூச்சம் தாக்க
"ச்சே விடு  சுத்த மோசம் "
இயல்பாய்  வந்துவிட
கண நேர அமைதி ..
கோபம் வந்துவிட்டதோ ...
திரும்பியவள் கண்களில்
எதுமே தென்படவில்லை..

ஏக்கங்கள் குடிபுகுந்து
ஏந்திலையை வாட்ட
இதய துடிப்பு
எகுறி குதித்து எழுப்பிய ஓசையில்
ஏதுமறியாது ஏங்கி  தவித்தது மனது

மென்மைகளை திரட்டி
கன்னங்களை  தீண்டிய கரம் ஒன்று
கழுத்து வழி இறங்கி
காதல் குன்றுகள் நோக்கி பயணம் தொடர..
இதை எட்டி நின்று பார்த்து ரசித்த
மதியும் மதி கெட்டு மனம் தளும்பி
முகில் கொண்டு முகம் மூடி
அவன் மோகம் தணிக்க
முழுவதுமாய்  முயன்று மறைந்தான் ..
நாணம் கெட்ட நங்கையின்
நிலை கண்டு
ஓரமாய் ஓங்கி நின்ற
சவுக்கு மரத்தின் இலைகளும்
சல சலத்து சிரித்து
இருள் இழுத்து மறைத்து கொண்டது ...

இதை பார்த்த இவள்மனதும்
கள்ளுண்ட மலராகி
கவிந்து குவிகையில்
எங்கோ ஒரு குரல்
எட்டி ஒலிக்க...
தனிலை கண்டவள்
தடுமாறி தாவணி சரி செய்து
தடம் மாறி இடம் மாறி
தத்தளித்து நிமிர்கையில்
இன்னும் அவன் கரத்தில்
இயல்பாய் சிக்கிகொண்ட
தாவணி வர மறுத்தது ..

நாளை வருகிறேன்
நயமான உச்சரிப்போடு
உவப்பற்ற உவகை அற்ற
உள்ளத்தோடு  எட்டி நடந்தாள்
ஏக்கத்தை சுமந்தபடி ..

நாளை வருவானா..
சந்தேகந்தின் சாயல்
சடுதியாய் சலனங்களை உரசிய பொது
உள்ளே ஓர் குரல்
ஓங்கி ஒலித்தது ..
அடி போடி
ஓடி போக அவன் என்ன
மானுட  காதலனா ...?
தென்றல் காதலன்
தினமும் வருவான்
உன் இன்பம் திகட்டும் வரை ...

தூறல்

 
மாலை நேரத்தின் மங்கிய ஒளி
மழை முகிலின் புனர்தலினால்
எங்கும் மெலிதாய் இருள்
எட்டி நடை போட்டுகொண்டிருந்தது ..
மாரி தவளைகளின்
மரணத்துக்கு முன் ஓசை
மண்டையை பிளந்து கொண்டிருந்தது ..
குளிரை குத்தகைக்கு எடுத்து -காற்று
உடலில் நடுக்கத்தை விதைத்துகொண்டிருன்தது ..
மௌனித்த மனங்களின்
முணுமுணுப்பு போல்
மழை நின்ற பின்னும்
அதன் தூறல்கள் தூவிகொண்டிருன்தது ..
மனதில் இல்லாத ஈரத்தை
மனதுக்கு வெளியே உணர முடிந்தது ...

பல விரக்திகளின் விளிம்பில்
வழிந்து கொண்டிருந்த
ஏக்கத்தின் குருதிகளில் 
தனிமை பேய் தாகம் தீர்துகொண்டது ..
எண்ணிலடங்காத ஆசைகளை
எளிதில் புதைத்துவிட்டுப்போன
இருதயம் இன்றோ நாளையோ
தன் இருப்பை இழக்க நினைத்த வண்ணம் ...

பல ஆயிரம் மயிலுகப்பால்
படர்ந்த  இதயம் -இன்று
பற்றி படர ஏதுமன்றி
பரிதவித்து படபடக்கின்றது
வெறுமைகளில் இன்ப
விதைகளை விதைத்தவனே
அதன் பசுமைகளை
அறுவடை செய்து போனது ஏனோ
விரக்திகளை மீண்டும்
விதைகாளாய் விட்டு ...

தூறல் நின்றிருந்தது
வெளியில் .....

வரவு

 

கரு நீல  கம்பளத்தில்
விதைத்து விட்ட வைரங்களாய்
சிதறிக்கிடந்த விண் மீன்கள்
நிலவில் ஒளியை உறிஞ்சி
ஒளிர்ந்து கொண்டிருந்தது ...
நாகர்ந்துகொண்டு இருந்த
மேக கூட்டங்கள்
அடிகடி நிலவின் இருப்பை
இருட்டடித்து கொண்டிருந்தது ..

மெலிதான தென்றல்
மெல்லிடை மோதி
ஏதோ ஒரு கண பொழுதின்
நினைவலைகளை தீண்டி சென்றது ...
எங்கோ ஒரு மரகிளையில்
அமர்ந்திருந்த செண்பகமும்
தன் ஜோடி கிளை தேடி
அவப்போது கூவிகொண்டிருன்தது ...

இரவின் அமைதிக்கு புறம்பாய்
அவள் மனது அதிர்ந்து கொண்டிருந்தது
இன்ப அனுபவங்களை தேடி
அசைபோட்டவண்ணம் ...
பருவத்து வினாக்களுக்கு
விடைதாளாய் வந்தவன்
பல கேள்விகளுக்கு
விடையாகி போனவன்
பல நாட்களாய்
வினாவாகி வாட்டுகின்றான் ..

தொலைவுகள் அதிகம்தான்
நினைவுகள் தீண்டும் தூரத்தில் அடங்கிவிட்டது
கனவுகள் அதிகம்தான்
அவன் கடைக்கண் பார்வையில் நிறைவேறி விட்டது
காலம் அதிகம்தான்
கூடி கலந்த போது அது குறுகிவிடிருன்தது..விரல்களில் மின்னிய
வெள்ளை கல் கணையாழி சொன்னது
துஷ்யந்தன் அவன் என்று ...
எங்கோ ஒரு மூலையில்
ஒரு பல்லி சொன்னது
எண்ணங்கள்  தவறென்று ...
நிலவினில் தெரிந்த
அவன் முகம் சொன்னது
என் தேவதை நீதான் என்று ...
அருகிலே தூங்கும்
கைத்  தொலை பேசி சொன்னது ..
அவன் இல்லமைகளின் பதிவுகளை ...
காதிருகின்றாள்...
அவன் வரவு குறுஞ் செய்தியிலும் முடியலாம் ..
கார் குழல் ஏந்தியும் தொடரலாம் ...

உன்னை இழந்து ஒரு இரவு

 

 இரவின் நிசப்தத்தை
இருள் உறிஞ்சிகொன்டிருந்தது
எட்டாத உயரத்தில்
எட்டி பார்த்தவண்ணம்
ஓர் ஆந்தை
ஓயாமல் அலறிகொண்டிருன்தது
தூரத்தில் ஓர் நாய்
துக்கம் கலந்து
துயரம் செறிந்து ஊளை இட்டவண்ணம் ...

கருப்பு வெளிக்குள்
புள்ளிகளாய்
பூசிகளின் மினு மினுப்பு
அண்ணாந்து பார்த்தால்
அண்ட வெளியில்
அள்ளி தெளித்த நட்சத்திரங்கள்
ஒளி மங்கி இருள் விளக்காய்
நிலவை தேடி ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன ...

ஒற்றையாய் பனைமரம்
ஓங்கி வளர்ந்து
திரும்பும் போதெல்லாம்
திடுக்கிட செய்து கொண்டிருந்தது
அடிகடி உரசி சென்ற காற்று
அதன் அலசலில் ஆடிய மரங்கள்
நெஞ்சு கூண்டில்
பீதியை புசித்துக் கொண்டிருன்தது ....

அடுப்பங்களையில் அடிகடி
உருண்டு புரளும் பாத்திரங்கள்
சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அமைதியை கிளறி ஆர்பரிப்பு செய்வது போல்
மன கூண்டின்
தைரியத்தை  சீண்டி
பீதியை புரண்டு ஓட செய்துகொண்டிருந்தது ...

ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரோரம்
ஒருக்களித்து உக்காந்து
உச்சமாய் பல்லி
இசுசு  இச்சு  என்ற போது
மன பயம் பிச்சுக்கொண்டு போனது ...

அய்யஹோ...
ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...

என் பந்தம்

 


 உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
 நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...

எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....

சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
 துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..

பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு

இருள்வானும் எழில்கொள்ள

 


 உறவுகளின் உரசல்களில்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களை பற்றவைத்துக்கொண்டது
ஏக்கங்கள் எட்டி நின்று வதைத்தது போய்
கிட்ட வந்து ஆடை தொட்டு இழுத்தது
இடறி விழுந்து எந்திரித்த பொழுதுகளில்
எக்காளமிட்டு சிரித்து மகிழ்ந்தது
பிறள் மனது ...

மனமெங்கும் இருள் சூழ
தனமிங்கு பகையாக
கனமென்று இதயம் துடிக்க
பிணமன்று சொல்ல
பகைமார்பும் எம்பி தணிய
பிடுங்கி எறிந்த கொடியாய்
பேதை உயிருடல் சோர
ஏக்கம் கலந்த பார்வையில்
பல தேக்கம் கலந்து காத்திருந்தபோது

இருள்வானும் எழில்கொள்ள
மருள் கதிரும் உருக்கொள்ள
கருக்கொண்ட மேகம் தனை
கதிர் கொண்டு அணைததுவோ...
நீல வானும் எழில்கோலம் கொள்ள
கதிரவன் கதிர்கரம் கொண்டு
முகில் தனை புறம்தள்ள
ஒளிக்கரம் வானை தழுவுவது போல்
உள்ள இருளும் ஓடி ஒளிவதுபோல்
எங்கோ ஒரு குரல்
எட்டி தழுவியது செவிகளை
விட்டு விலகியது இருள் மட்டுமல்ல
இதயத்தின் இருப்பின்மையின்
உறுதியற்ற நிலைபாடுக்களும்தான்

எட்டி போன இளமை காலம்

வான் பார்த்து ஏங்கி
வழி விழிபார்த்து மயங்கி
ஊண் தாண்டி உயிர் பருகி
தேன் தந்த திரவியம்
அன்று  நீ எந்தன்
தாள லயம் ....

எட்டி போன இளமை காலம்
கொட்டி சென்ற முதுமைகோலம்
கட்டிசென்றது கனமான ஒரு பிணைப்பை
எட்டி நின்றே சுகித்துவிட்டேன்
உன் இளமையின் வளங்கள்தனை
வட்ட வட்டமாய் வரிகள் பதித்த
முதுமையின் கோடுகளில்
உன் முத்தங்களின் சுவடுகள்தான் ..

இளமையில் எட்டாது போன காதல் தனை

முதுமையில் கிட்டாத இளமைதனை
என் முகத்தில் தேடும் என் விழுதே ...
உன் நரை படிந்த தாடியின்
சொரசொரப்பு சொன்னது
என் நினைவுகள் உன்னை
ஊசியாய் துளைத்த கதை
உன் வசீகரம் இழந்த உதடு சொன்னது
ஒவொரு கணமும்
என் பெயரை உதிர்த்தே உலர்ந்த கதை ..
சுருங்கி போன உன் கை தோல் சொன்னது
கருகிப்போன நம் இளமை கதை

இருந்தும் உன் இறுக்கமான பிடிப்பு சொன்னது
நெருக்கமான உன் காதல் உணர்வை
யார் சொன்னது என் காதல் செத்து விட்டதாய்
என் காதல் நம் காதலாகி
வாழ்கிறது காலம் கடந்தும்
துருவ நட்சத்திரமாய் ..

பார் நிலவு

 

 மதியன்ன வதனம்
அதிலிரு கதிரென கண்கள்
வானவில்லில் தெரியாத இருளை
தீட்டி வைத்தது போல் புருவம்
குடை மிளகாயை
கொஞ்சம் வெட்டி தலை
கவிழ்த்து  வைத்தது போல் மூக்கு ..
கொவ்வை கனியதனை
வாள் கொண்டு பிளந்தது போல்
வளவலப்பாய் உதடு ...
பால் நிலவு
இந்த பார் நிலவின் ஒளியில்
பதுங்கிவிட நினைக்கும்
ஒளிபோருந்தும் அழகு நிறம்
வெள்ளை வெண்டைகள்தாம்
பத்து பதிந்து நீள்கிறதோ
உன் கைகளில் ....

அழகு பதுமையே
உன் அழகு திருமுகத்தில்
ஒரு முகமாய்
உன் நீள் விழிகளில்
ஏன் இந்த கலக்கம் ...
எதற்கு இந்த நிராசை ...
கார் குழல் போர்த்தி
கதிர் வதனமதை
பார் பார்க்க
நீ அருளாததேனோ ...?

உன் அழகால்
உந்தபட்டு
உன்னை -உல்லாசத்துக்கு
உடனழைத்து உரு குலைப்பார்
உத்தமர்கள் என்றெண்ணியா ..?
இல்லை
உதிர்ந்து போன
உன் உதிரத்து
உறவு எதையும் எண்ணியா ..?

அன்றில்
காலம் காலமாய்
கன்னியரை வதைக்கும்
கொல் காதல் விரக்தியா ...?
எதற்கிந்த சோகம் ...
உன்னை சூழ தீ எரிந்தாலும்
உள்ளிருந்து வெளி வா
அதர்மம் அளிக்கும் அருவாளாக..
உன்னை மீறி உயிர் பிரிந்தாலும்
உலகை காக்கும்
அருவமாய் உடன் வா ..

பெண்மைகள்
மென்மைகளுக்கு மட்டுமல்ல ..
பல மேன்மைகளுக்கும்
சொந்தமடி ...
உன் கண்வழி உறையும்
உன் கசப்பான அனுபவங்களை
கண்ணீரோடு கழுவி விடு
விழிகள் விடியலை சந்திக்கும்

என் பந்தம்

 


 உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
 நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...

எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....

சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
 துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..

பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு

சொல்லிவிடு

 

 விரக்தியின் விளிம்புகள்
விகாரமாய் விளையாடும்
மனகூண்டின் மையபகுதியில்
சூனியம் குடி கொண்டு
சுழல் காற்றாய் அடிக்கடி வீசும்

ஆழ்ந்துறங்கும் வேளையிலும்
அலாரங்கலாய் ஒலிக்கும்
உன் நினைவு கூவல்களுக்கு மத்தியில்
சேவல்களின்     அவசியம்
செயல் இழந்து தூங்கும்

உலர்ந்து போன உதடுகளும்
உன் நினைவுகளால்
உப்பி துடிக்கும் இதயமும்
சப்பி துப்பிய உன் துரோகங்களுக்கு
சடுதியாய் முக கண்ணடியாகின்றது..

தொடர்ந்து விட துடிக்கும்  உறவுக்கு
முற்றுப் புள்ளிகளை
நீ வைக்க முயன்றாலும் ..
என் முழுமைகளை திரட்டி
என் கையில் இருக்கும்
இந்த நாய் குட்டியாய்
உன்னை காண்கிறேன் ...

என் தழுவல்கள் இனி இதற்கு சொந்தம்
என் உணர்வுகள் இனி இதற்க்கு பந்தம் ..
என் தனிமைகள் இனி நமக்குள் இன்பம் ..
எங்கோ இருக்கும் உன்னை
நான் என் அருகில் பார்கிறேன் ..
இங்கே இருக்கும் எனை நீ
அங்கு எதுவாய் பார்ப்பாய் ?
உன் மனைவியில் ..?
உன் மகிழ்வில் பிறந்த குழந்தையில் ?
எதுவாய் பார்ப்பாய்
சொல்லிவிட்டு செல் ....
என் இதய நரம்பின் ஸ்ருதிகள்
இடம் மாறுவதற்கு முன் ...

சளைத்தவள் அல்ல ....

நீளமாய் ஒரு நீல வானம் 
அதில் பஞ்சன்ன குவியலாய்
அங்கொன்றும் இங்கொன்றும்
அசைந்தோடும் வெண் மேகம் யாரை தேடுதோ ..
வான் நீலமா அன்றில்
வான் வர்ணம் தன்னுள் கொண்ட
கடல் நீலமா எது நீலம் என
எழுந்தாடும் விடையற்ற வினாக் கோலம் ...
ஒன்றன் பின் ஒன்றாய்
வெண்ணுரை தள்ள
காதலியை பின் தொடரும் காதலனாய்
வேற்றுமை தெரியாத வெள்ளலைகள்
வேகமாய் வந்து வெறும் தரையை தொடும் போதெல்லாம்
முடிவில்லாத அதன் கரை காதலும்
முயற்சி தேயாத அதன் முயல்வுகளும்
முழுவதாய் நெஞ்சில் படியுமா ...?

கடல் கரை நுழைந்தாடும்
கன்னியர் தம்
மனம் நுழைந்தாட விளைந்து
கரை தாண்ட முயலும் காளை
கரை சேர்வானா ...?
எதிர் விளைவாய்
ஏக்கத்தை பரிசளிக்கும்
உடலோடு ஓட்டும் நனைந்த ஆடையும்
உப்பு காற்று உரச உல்லாசமாய்
கட்டவிழ்ந்து ஆடும்
கரு நிற கூந்தல் மங்கையரும்
கல கலத்து சிரிக்கும் சத்தம்
கடலின் நிசப்தத்தை களங்கம் செய்வதால் தானோ
கரை மீது அலைகள் காட்டு தனமாய் மோத விளைகின்றன ..?

கடலில் இறங்கி கயல் பிடிக்கும் காளைக்கு
கன்னியர் கயல் விழிக்குள்
தூண்டில் இலாமலே  துவண்டு சிக்கியது
துன்பத்தில் முடிமா .. இன்பத்தில் தொடங்குமா ?

நாலனாக்கு முறுக்கு விக்கும்
நடை தளர்ந்த சிறுவன் பசிக்கு
நாலு முறுக்கு வாங்கி தர
நல் இதயம் ஏதும் இரங்குமா...?

முகம் திருப்பும் காதலிக்கு
முழுதாய் அவளை நம்பவைக்க
முனைந்து  செய்த சத்தியங்கள்
காற்றோடு கலக்குமா ..?

எண்ணிலடங்கா எண்ண வினாக்கள்
எழுந்து நிழலாட ...
நீர் குடையும் என் ஆசை
வெறும் விழி குடைந்தாட
விலகி செல்கிறது ..
யார் சொனார் ...?
கடலும் அலையும் கலங்கும் மனதுக்கு
அமைதியை தருவதாய் ....?
விடை இல்லாத கேள்விகளை
விகுதியாய் மட்டுமே விட்டு செல்கிறது
இந்த கடலும் அலையும் அதன் களிப்புகளும் ..
நாளையும் வருவேன்
நாளை மறுநாளும் வருவேன்
நான் இருக்கும் வரை வருவேன்
அலையே உனக்கு நான் சற்றும் சளைத்தவள் அல்ல ....