Thursday, May 31, 2012

உனக்காக



நினைவுகள்

உனக்காக
 நான் எழுதிய கவிதைகளை
நீ மறந்து போகலாம்
என் நினைவுகள் ...
உன்னால் மறக்க முடியுமா ...?
நினைவு

என் கனவுகள் தினம்
தீனி கேட்கிறது உன் நினைவை ..
இருந்தும் குறையாத அட்ச்சயமாக
உன் நினைவு ..

சீதணம்
உனக்கு
என்னால் கொடுக்க முடிந்த
ஒரே சீதனம் ..
அன்பு ..

வாழ்க்கை

உன்னோடு வாழும்
ஒரு கணம் போதும்
என் வாழ்க்கைக்கு
அர்த்தம் கிடைக்கும் .....




வந்துவிடு...



ரம்

வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான் தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..




கோபம்


எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச் செய்கிறதே
உன் கோபம் ...


உயிர்

ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...


ஆனந்தம்


ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...

கடமை



வீட்டுகாவலாளிக்கோ
விடியும் வரை கடமை...
தோட்ட தொளிலாலிக்கோ
இருளும் வரை கடமை...
காவல் தொளிலாலிக்கோ
குறிப்பிட்ட நேரம் வரை கடமை...
அவரவர் கடமைக்கு
நேரம் குறித்த கடவுள்
காலையில்
கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...
உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு
உறங்காது போன உன் இரவுகளை-----


அம்மா உன் கடமைக்கு
பாசத்திற்கு வரையறை
குறிக்கவில்லையே ..

பால்ய பருவம்..




அழகான என் நட்பு
அரை குறையாய் போனபோதும்
அழியாத நினைவுகளை
அந்த நாள் ஞாபகங்கள்...

கூட்டாக சேர்ந்து
குருவிகளாக 
கும்மாளம் அடித்து
அதிபரிடம் குட்டு வாங்கும் போது
பள்ளிக்கூடம் வெறுத்து ...
பழிவாங்கும் முகமாக
மொட்ட மண்டை... பட்டபெயர் வைத்தபோது
வலிகளும் மறந்தது ...



ரகசியமாக
வினாத்தாள்களின்¨
விடைகளை பரிமாறி
ஒரே புள்ளிகள் பெற்றபோது
நாம் ஒற்றுமைகளை நினைத்து
பள்ளி அறையே வியந்தபோது
நமுட்டாக சிரித்தபோது
சோதனைகளும் சுகமாகதான் இருந்தது ...



கோவில் திருவிழாக்களில்
சொல்லி வைத்து ஆடை அணிந்த போதும்
அவனுக்கும் கொடு என்று சொல்லி
கச்சானை பகிர்ந்த போதும்
ஆண் பெண் பிரிவின்றி
நட்பும் ஜொலித்து ...

பருவத்துக்கு வந்தபோது
பக்குவம் சொல்வதாய்
பால்ய சினேகிதனுக்கும்
பத்தடி தூரம் வைத்து கலாச்சாரம் ..



பறந்தாடி பல
குட்டை குளமெல்லாம்
நுழைந்தாடி ... புழுதியெல்லாம் குளைந்தாடி
குச்சிமிட்டாய் திருடி அடிவாங்கி ...
மாமரத்து அணில்களாய்
மரம் தாவி ...
மங்களம் மாமியிடம் அடிவாங்கி
மனதோடு சபித்தபோதேல்லாம்
இனித்த நட்பு .....


இன்று  நினைத்தாலும்
ஏக்கம் கொள்கிறது ...
என் சிறுவயது நட்பு வேண்டும்
சிறுக சிறுக சில்மிஷம் செயும்
என் பால்ய பருவம் வேண்டும்..

எல்லாம் இழந்து ..
இன்றும் வாழ்கிறேன்
என் இணையத்து
அருமை தோழர் தோழிகளால் ...

நான் இருக்கும்வரை
என் நட்பும் நம் தோழமையும்
என்றும் வாழும்
என் தோழர்களே ...








Wednesday, May 30, 2012

வேண்டும் ..




ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்


பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்


பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்


பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..

அணைக்கின்ற சுகம் வேண்டும்..




அன்பே
உன் தலை கோத வேண்டும்..
அலைபோன்ற உன் முடிகோதி
அணைக்கின்ற ஒளி தேடி
அன்பாலே அடிகூடி
உன்னை அணைக்கின்ற சுகம் வேண்டும் ...

மனம்போல மனம்கூடி
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்..

பேதை இவள் பேதளிக்கின்றேன்
பிரியாத பொழுதுகள் வேண்டும்..
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்..
துவளாத உணர்வுகள் வேண்டும்..
அதில் சுகமாக உன் முடி கோதவேண்டும் ..
உன் தலை முடி நான் ஆளவேண்டும் ..

Tuesday, May 29, 2012

shhh...












இதழ்வழி..



உன் வரவுக்காய்
காத்திருப்பது
பூ மட்டுமல்ல
இந்த பூவையும்தான்
என்று வருவாய்
என் இதழ் அணைத்தது
நம் இதயங்களை
இதழ்வழி பரிமாற்றிக்கொள்ள ...






தவம் இருக்கும் ...




அன்பே ...
உன்னோடு அருகமர்ந்து
அளவளாவி ...ஆவல்கொண்டு
ஆனந்தகதைகள் பேசவில்லை
கையேடு கை கலந்து
களிப்பினில் கூடவில்லை
மெய்யோடு மெய் சிலிர்த்து
கலவிகளில் கூடவில்லை ..
மனதோடு மனதுரசி
நினைவோடு நெகிழ்ந்துருகி
கனவோடு காதல் கதைகள் பேசினேன் ..
இந்த பூ உன் பூஜைக்கு வாராது போகலாம்
என் இதயத்து பூக்கள் ...
என்றும் உன் நினைவு பூஜைகாய்
தவம் இருக்கும் ...



விண்ணப்பம் கேட்கின்றது




தினம் தினம் உன்னுடன்
பேசும் பொழுதுகளில்
உன் உதடுகளையே
என் உள்ளம் ஸ்பரிசிக்கின்றது..
உன் உதடுகளிடம்
என் உள்ளம்
ஒரு விண்ணப்பம் கேட்கின்றது
"ஒருமுறை ஒற்றிச் செல்
உணர்வுகள் செல்லரித்து போகுமுன் ..."
உனக்கு கேட்கின்றதா ...?
மன்னித்து விடு
மடல் போட்டு முத்தம் கேட்க
என் வெட்கத்திற்கு வெட்கமாம் ...
மனம் திறந்திடு ..
இதழ் பகிர்ந்திடு



பிள்ளையார் சுளி



பேனா எடுத்ததும்
பிள்ளையார் சுளிகூட
போடவரவில்லை
உன் பெயரே பிள்ளையார் சுழியானது
அதனால்தானோ எனவோ
என் காதலும்
பிள்ளையாரின் திருக்கல்யாணம் போல்
தினம் தினம் தள்ளி போகின்றது ...
இருந்தும் என் கனவுகளும்
உன் நினைவுகளும் சுமந்தபடி
என் நாள் குறிப்பேடு ...



Monday, May 28, 2012

மறுபடியும்..




உன்னை சுற்றியே
என் உலகம் சுழல்கின்றது
உன்னை பற்றியே
என் நினைவு அலைகிறது
உன்னை தேடியே
என் உணர்வு கலைகிறது


உனக்காக என் பொழுது புலர்கிறது
உனக்கான என் ஏக்கங்களில்
என் பொழுது கரைகிறது ..
என் தலையனையை கேட்டு பார்
உனக்காக நான் ஏங்கி தவித்த
தனிமையின் கொடுமைகளை
தாராளமாய் சொல்லும் ....

என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..


உன்னால் புறக்கணிக்க பட்டபோதும்
உன்னை தேடியே என்
இதயத்தின் பயணம் தொடர்கிறது ..
பலதடவை உன்னால் மிதிபட்டபோதும்
மறுபடியும் உன் பாதத்தை தேடி
என் இதயம் வருவது
உன்னை நேசிக்க அல்ல
உன்னை ஸ்பரிசிக்க..



இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...



பொழுது புலர்ந்ததில் இருந்து
ஒரு பொட்டு கூட ஓய்வு இல்லாது
பட படவென பல வேலைகள் பார்த்து
பாட புத்தகத்தை எடுத்தால்
படுத்து உறங்காமல்
பாடமா படிக்க தோன்றும் ...?

ஈழத்து சிறுமிகளின்
சிறப்பான வாழ்வு இப்டித்தான்...
தாயை இழந்து
தந்தையின் அரவணைப்பில்
தளர் நடை போட்டு
தரணியை வலம் வரும் வயதிலேயே
தாய்க்கு நிகரான பொறுப்புகள்
தலையில் இறக்கபட்டுகின்றது ....

அன்றில் தந்தையை இழந்து
தாயின் அரவணைப்பிலும்
தாய்க்கே தாயாய் மாறும்
தருணங்களும் உருவகபடும் ...

தாய்க்கே தாயாகி
தந்தைக்கே தாயாகி மகளாகி
தன் சிறு வயதிலும்
தாளாத சுமையை தாங்கும்
ஈழ சிறுமியின் கல்வி
எட்டாத கொப்புத்தான்...

அவளுள்ளும் ஆசைகள்
அடுத்தவரை போல்
தானும் கனவுகளை சுமக்க ..
ஆறாத காயங்கள்
அழியாத சோகங்கள்
அவற்றை எல்லாம்
அளித்துவிட்டு அரங்கேற ...

ஆசைகள் மட்டும் இருந்தென்ன லாபம்
அமரரான அன்னையும் தந்தையும்
அருகிருந்தால்
அவளாலும் அகிலத்தை ஆளமுடியும் ...
இருந்தும் விடா முயற்சில்
விழுதுகளை பற்றி எந்திரிக்கும்
ஈழத்து சிறுமிகளின்
எதிர்கால ஆசைகளுக்கு
இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...

புத்தகத்தில் தலைவைத்து தூங்கினால்
அறிவு வாளருமாமே...
அந்த வரத்தை
ஈழத்து சிறுமிகளுக்கு
இயைந்தளித்துவிடு ....


கணப்பொழுதை தந்துவிடு ..




உன்னுடன் நான்
என்னுடன் நீ
எமக்குள் ஓர் உயிர்
காதலால் என் மனவறையில்
உன்னை சுமந்தேன்
நம் காதல் பரிசாய்
எனக்குள் என் கருவறையில்
உன் உயிரை சுமப்பேன்


உனக்குள் நான்
நமக்குள் நம் அன்பு பரிசாய்
என் இதயமும்
நம் இன்பமும் சேர்த்து
உருவாகிய காதல் பரிசாய் நம் குழந்தை


காலங்கள் கடந்தும்
நமக்குள் ஒரு அன்பின் பிணைப்பு
அகத்துள் ஒரு மலர்ச்சி
பூவாகி காயாகி கனிந்து
பழமாகி மீண்டும் விதையாகி
விருட்சமாகி நம் குலம் அன்பு பிணைப்பால்
அனுதினம் வளரும் அந்த காட்சியை
தினமும் அக கண்ணில் காண்கிறேன் கண்ணாளா ..


உன்னோடு ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
ஒருவர் கை பிடித்து
உலாவந்து உலகை வென்று
காதலால் ஒரு பரிசளிக்கும்
அந்த கணப்பொழுதை தந்துவிடு ..
 
 
 

என் தந்தை...




நல் உரைகள் கூறி
நல் வழியில் என்னை
நல் வழி நடத்திய
என் மரியாதைக்குரிய
மகத்தான ஓர் மனிதன்
என் தந்தை

வாழும் காலத்தில்
வாழ்ந்தால் இப்படிதான்
வாழவேண்டும் என்று
எடுத்துகாட்டாய்
வாழ்ந்து காட்டும்
ஆடவன் என் தந்தை

தளிர் நடை பயின்று
தடுமாறி விழுந்த போதும்
தன்னிலை இலாது
தாறு மாறாய் ஓடிய போதும்
தன் கரம் தந்து வழி நடத்தியதும்
வழி காடியதும் என் தந்தையின் கரங்களே ...

வாகையின் பாடங்களை
பல தடவைகளில்
ஆசானாகவும்
அன்பான சொதரனாயும்
அருமையனா நண்பனாவும்
அருகமர்ந்து அன்பாக பயிற்ருவிதது
என் தந்தையின் கரங்களே ...

ஆனா முதல்
அறுதிவரை
அன்போடு கற்றுத்தந்த என் தந்தையே
அடுத்த பிறவிகளிலும்
எனக்கே தந்தையாய் வேண்டும் ...

அன்பாக ஆசையாக
உங்கள் கரம் பற்றி
நடை பயிலும்
அந்த ஐந்து வயது
மீண்டும் வேண்டும் எனக்கு ..
 
 

விருட்சமாய் ...




உன் புன்னகையால்
உன் தீண்டல்களால்
உன் சீண்டல்களால்
உன் நினைவுகளால்
என்னுள்ளே விதையாக விழுந்து
என் விருட்சமாக வளர்ந்து
என்னுள்ளே ஆட்சி செய்கிறாய் ...


பசுமையான உன் நினைவுகள்
எனக்குள்ளே என்னை தொலைத்த நினைவுகள்
உறங்காத இரவுகளில் நட்சத்திரங்களாய்
உன் நினைவுத் துளிகள்
நிழல் கொண்டு எனை தீண்ட
சுகமான சுந்தர நினைவுகளோடு
உனக்கான என் காத்திருப்பு
தொடர்கின்றது .....


தொலைவினிலே நீ இருந்தாலும்
தொடரும் உன் நினைவுகள்
எனக்குள்ளே நட்சத்திரங்களாய்
மினு மின்னுகின்றன ....

உன் நினைவு சங்கிலிகள்
பாதமாகி பலவாகி
பன் மடங்கு என்னை
பதவிசாக வியாபித்து ...
மூளை ஆகி முண்ணான் ஆகி
மூளியமாகி ,மூலமே நீயாகி
முழுவதுமாய் கட்டி போட்டு
என்னுள் பெரும் விருட்சமாகி
வியாபித்து பூத்து குலுங்கி
புன்னகை மணம் பரப்புகின்றது


என்னுள் பூத்திருக்கும்
உன் நினைவு பூக்களின் மணம்
உன்னை சேர்ந்தும்
உனக்குள் இருக்கும்
மௌன சிறையை உடைத்து
என்று வருவாய் என்னுள் பூ பறிக்க ...
அன்றில் வராதுதான் போவாயோ..?


அன்பாய் பேசி அகம் எனும் கூட்டில்
விருட்சமாய் படர்ந்து வேரூன்றிய நீயே
வேர்களில் வெந்நீரும் ஊற்றுவாயோ
என் விழுதுகளில்
விழி நீரும் தோற்றுவிப்பாயோ..?




சிதைந்து போனது...



அன்பே ...

அணைத்திட துடிக்கும் என் கரைங்களை விட
உன்னை அழைத்திட துடிக்கும் இதழ்களை விட
உன் ஸ்பரிசத்தை உணரும் உடலை விட
உன்னை காண துடித்த என் கண்களுக்கு
காரணமின்றி ஏன் தண்டனை கொடுக்கின்றாய் ...

உன்னால் உன் நினைவுகளால்
சிதைந்து போனது என் இதயம் ...
கண்களின் வழியே இதயத்தை காணலாமாம்
என் கண்களில் வடியும் என் உதிரம்
உன்னால் உன் நினைவுகளால்
அணு அணுவாக சிதைந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை காட்டுகிறதா ....?

உன் நினைவுகளை மலர் கொண்டு
தினவேட்டில் தீட்டினேன்...
என் வேதனைகளை சுமந்து
அதுவும் எனக்காக தன்நீரை
சென்நீராக சிந்துகின்றது
நீமட்டும் என்னை உணராது போனதேனோ ..


என் மனதை திருடிய நீயே
என் மரணத்திற்கும் மாலை இடுவாயோ ..
ஒரு முறையாவது
உன் காதலை நான் ஸ்பரிசிக்கும்
வரம் ஒன்று தந்துவிடு
மனதோடு வாழ்ந்துவிட்டு போவேன் .


நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...




எங்கோ தொலைவில்
நான் இருந்தாலும்
என்னுள் நான் வாளர்த்த காதல்
உன்னுள் விதையாகி
மரமாகி காய்த்து
கல கலவென பூத்து
சிரித்து மணம் வீசியது
எனக்கு மட்டும்
தெரியாமல் போகுமா ...??


தொலைவில் இருந்து
நான் நீட்டிய காதல் கரத்திற்கு
மனதுள் காதலை வைத்து
நேசக் கரத்தை நீட்டிய
உன் கரங்களை
ஸ்பரிசித்த போதே
உன் கரங்களின் ஊடே
என்னால் களவாடபடட
இதயத்தியும் ஸ்பரிசித்து கொண்டேன் ...


சம்பிரதாயங்களுக்கு கட்டுபட்ட நீ
உன் சல சலக்கும் சலனங்களுடன்
சரி சமமாய் போராடும்
சமர் சத்தங்களும் எனக்கு கேட்கும் ...
உன் ஆசைகளை உதிரிகள் ஆக்கி
என் அன்பினை துளிராத பட்டமரமாக்கி
வழிந்தோடும் கண்ணீரை
கரை புரளும் நதியாக்கி
வாழ்வை தொலைத்தவன் போன்று
வான் பார்க்கும் உன் சிரசும்
தரை பார்க்கும் தருணத்தை தந்தேனோ ...?


இனியவனே ... உனக்கு
இனிமைகளை சொந்தமாக்கத்தன் நினைத்தேன்
நீ என் நினைவுகளை சொந்தமாக்கி ஊமையானதேன்
கனவுகளை சொந்தமாக்க நினைத்தேன்
கலங்கும் கண்களை சொந்தம் கொண்டதேன் ...


தென்றலை தூது அனுப்புகின்றேன்
என் சுவாசத்தை நீ சுவாசித்து கொள்....
என் நினைவுகளை பரிசாக கொடுத்தனுப்பு
உன்னை சுடும் என் நினைவுகள்
உன்னிடம் வேண்டாம் .....


நினைவுகளுடன் வாழ்வது
என்னோடு போகட்டும்
நீயாவது நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...


அமாவாசைகள் ...




உனக்காக என் காத்திருப்பு
தெரிந்தும் மறைந்தும்
மறைத்தும் உன் பார்வைகள் எதற்கு ...
ஒளிந்திருந்து ஒருக்களித்து
உன் பார்வைகளை வீசாதே
உன்னை நான் அறிவேன்
என்னை நீயும் அறிவாய் ...


தினம் தினம்
உனக்காக மட்டும்
என் தனிமைகள் தவங்களில் கரைய
உன் வரவுக்காக
உருகியபடி நான் ...
உன் வரவினில்
என் வாழ்கையை தொலைக்க
உள்ளன்போடு உனக்காக
என் காத்திருப்புக்கள்


உன் மனதை திறந்து
இருள் விலககி
உன் இதய அறையில்
என்று எனை கொலு வைப்பாய்
அன்று முதல் நாள் எல்லாம் பௌர்ணமிதான்
அது வரை பவுர்ணமிகளும்
அமாவாசைகள் தான் .....



உப்பு துளிகளும்




என் வானமே கருக்கொள்கிறது
வற்றாத நதியாய்
வரையறை இல்ல என் அன்பு
வசப்படாமல் போனதால்
என் விழிகளும்
வற்றாத வைகை ஆனதோ .....


என்னை சூழ பல இதயம்
இருந்தும் இல்லை எனகோர் உதயம்
காதலுக்கு மட்டுமல்ல
நல்ல நட்புக்கும் ராசி வேண்டும்
நல்லதே நினைத்தேன்
நான் மட்டும்
நயவஞ்சகம் ஏன் உனக்கு
ஆனந்த கண்ணீர் யாவும்
இன்று அணை கடந்த வெள்ளமாகி
ஆறு கடல் தாண்டிடுமோ ..
எள்ளி நகையாட நட்பென்று நீ எதற்கு
எதுமே இல்லமால்
பெயருக்கு ஓர் காதல் உறவு எதற்கு


என் இதயத்திற்கு வலிக்குமென்று
அவன் துயில என் ரணங்களை சுகமாக்கி
வெண் பஞ்சு மேகம் அனுப்பினேன்
என் நட்புக்கு தோள்கொடுக்க
நானும் ஒருத்தியாய்
என் தோழமை துயில
நட்பு கரம் கொடுத்து
வெண் மேகத்தை படுக்கை விரித்தேன் ...


வாங்கி வந்த வரமா
இல்லை .வந்ததால் வந்த சாபமா
நல்ல நட்பும் இல்லை
நான் நாடும் இதயமும் இல்லை
எட்ட நின்றே
என் வெண் மேக துகள்களை
கரு மேகமாக்கி
என் கண் வழியே
கர் இருளை திரட்டி
கண்ணீரை கரை புரள செய்கின்றது...

வானமே கண்களாக
வாங்கி வந்த சாபங்கள்
கண்ணீர் துளிகளாக
என் வானமும் காரைகிறது
என் கண்ணீர் துகளில்..
கண்ணீர் துளிகள் சேர்ந்து
கடலையே உருவாகினாலும்


கண நேரம் நனைந்து விடு
என் உப்பு துளிகளும்
உவப்பை உணர்த்திவிடும் .. ..