Monday, May 27, 2013

வலி

யாரும் அற்ற
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...

இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .

சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை

எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .

இருப்பு

உன் நினைவு சுமந்து
உன் காந்தப் புலங்களை தேடி
கடந்து நகர்கிறது காடுகளை புலன்கள்

கண்ணெட்டும் தூரம் வரை
கரைந்து சிதறும் பனிச் சிதறல்களின்
ஊசிக் கரங்கள் உள் நுழைந்து
உறையத் துடிக்கிறது .
உன் நினைவெனும் நெருப்பு
நீங்காது ஒளிர்வதால்
உறையாது உன்னை தேடுகிறேன் .

காற்றின் திசைக்கு
கடக்கும் ஒவொரு கணப் பொழுதிலும்
உன் வாசத்தை தேடும் சுவாசம்
வஞ்சித்து வருகிறது பெரு மூச்சாக .

ஊசிக் காடுகளின்
ஊசிப் பனிக் கதிர்கள்
உன்னை விடவா
என் உணர்வை பந்தாடிவிடும் ?

தொலைந்து போன
உன் பாத சுவடிகள்
பார்வைக்கு எட்டாது இருக்கலாம்
கடந்து செல்லும் காடுகள் கூட
உன் இருப்பை காட்டாது மறைக்கலாம்
நகந்து செல்லும் பொழுதுகள் கூட
உன் நிழல்களை நெடுஞ தூரம் நகர்த்தலாம்
ஆனால் உன் நினைவு சுமக்கும்
என் இதயம் சொல்லிவிடும்
உன் இருப்பை

Friday, May 17, 2013

சலன அலைகள்

 
எங்கோ ஒரு துளி
உடையும் ஓசையில்
உன்னை பற்றி படர்திருந்த
என் எண்ண குளத்தின்
சலன அலைகள் வளையங்களாய் ...

அன்று நீ இருந்தாய்
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க
இன்றும் இருக்கிறாய்
வண்ணமிழந்த எண்ணங்களாக ..

எனை கடக்கும்
தென்றலிடம் தேடினேன்
உன் சுவாசங்களை
என்னுள்ளே அவை
புயலாய் வீசிக்கொண்டிருப்பதை அறியாமலே ...

எங்கோ நிலை கொள்ளும்
என் பார்வை வட்டத்துள்
உன் சிரித்த முகம் ,
அது சிலிர்ப்பை ஊட்டினாலும்
உன் இன்னமையை
என்றோ உணர்ந்த இதயம்
இயல்பாகவே துடிக்கிறது .
இருந்தும்
உறை பனிபோல்
மாற்றவும் தயங்கவில்லை .

ஒரு சூரிய பார்வையின்
தீண்டலுக்காய்
தினமும் அது காத்திருக்கிறது
ஏக்கங்களை சுமந்தபடி .

Monday, May 13, 2013

முதல் கரு

 

அவள் கருவுற்றிருந்தாள்
கல்யாணமாகி கால் மாதத்தில்
அவள் கருக்கொண்டு விட்டாளாம் .
கணவன் முகத்தில் சாதித்துவிட்ட பெருமை
அவள் முகத்தில் எதோ ஒரு நின்மதி .

முதல் கரு
அவள் முகமெல்லாம் பூரிக்க வேண்டுமே
ஒரு பூவின் கட்டவிழ்தல் போன்ற புன்னகை மட்டுமே ,
ஒரு மலரின் மலர்ச்சியை மறந்தும் காணவில்லை .

முகமறியா கணவன் தொடுகையில்
அவள் முழுவதும் மலராத பொழுது
சூல் கொண்ட கரு
சுகத்தை அளிக்குமா ...?
அடுத்த பத்து மாதத்தில்
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி
அறியாமலே அச்சுறுத்தும்
அத்தையம்மாள் பேரில்
அரண்டு உருவான கரு
ஆத்மார்த்தமாய் இருக்குமா ?

பெண்மையின் முழுமையையும்
ஆண்மையின் முழுமையும்
ஆதாரப்படுத்த அகல் கொண்ட கரு தீபம்
அகத்தில் ஒளி வீசுமா ?

அவனையும் புரியவில்லை
அவர்களையும் புரியவில்லை
அதற்குள் அவள் கொண்ட சூல்
ஆறுதலை கொடுக்குமா ?
இயற்கையின் தேடுதலில்
இணைந்துவிட்ட இருடலின்
கலவி கடலில் தவறி விழுந்த துளி ஒன்று
முத்தான அதிசயம்
ஆவலைத்தான் தூண்டுமா ?

முதல் கரு ஒன்று
அதை சுமப்பவளை சுமை தாங்கியாகும்
ஆண் பிள்ளை பெறவேண்டும்
அது அவன் , அவர்களைபோல் வேண்டும்
தன் பிள்ளை என்று சொல்ல
தக தகவென மின்னவேண்டும் ..
கூன் குருடு செவிடு நீங்கி
குறையற்று பெறவேண்டும்
குலப்பெருமை காக்க
குறுகிய காலத்தில் குட்டிதனை ஈண வேண்டும் .

அவள் ஆசையாய் கருக் கொள்வதில்லை
அவசியத்தில் கருக் கொள்கிறாள்
ஆண்மையின் பரீட்சார்த்தமும்
பரம்பரையின் பீற்றல்களும்
அவளை அவசியத்துக்கு சூல் கொள்ள வைக்கிறது .
இருந்தும் அவள்
அடுத்த நிமிசத்தில் இருந்தே அன்னையாகிறாள் .

அம்மா

Photo: அம்மா 
********

ஆசை கட்டிலில்  பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட . 


ஆசை கட்டிலில் பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட .

Friday, May 3, 2013

புத்தனும்


 photo 521640_353436081420018_1410293788_n_zpsf31a2b9d.jpg 

மோகத் தீயின்
முழுவதுமாய் பிறழ்ந்து
பிறந்த பிறை நிலவென
ஜொலிக்கும் அவள் மேனியின் கீற்றில்
மிதந்து வரும் மெல்லிய ஒளிக் கற்றை
அவள் விம்பத்தை விரகமாக்கி செல்லும் .

காற்றின் திசைக்கு
அசையும் கற்றை கூந்தலின்
கவர்ச்சி விரிப்பில்
ஒளிந்திருந்த உணர்வு பறவைகள்
விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் .

அவள்  வெம்மையில் உருகும் தங்கமென
ஒற்றை துளியொன்று உருவெடுத்து
பிறையென வளைந்த நெற்றியில்
ஒரு கறையென கருக்கொண்டது
காதல் வேள்வியில் ஜொலிக்கும்
இருவிளியிரண்டும் மீன் விழியென
மினு மினுக்கும் .
வில்லென வளைந்த புருவம் தன்னில்
காதல் அம்பென ஒரு ஒற்றை ரோஜா போர் தொடுக்கும் .

வாய் சிவப்பா அன்றில் பூ சிவப்பா
பெண்மை தான் சிவப்பா ..

சங்கென நீளும்
செவிய கழுத்து தொட்டு இறங்கும்
பொன்கல  மாலை ஒன்று
புண்ணியம் செய்ததோ
இவள் கொங்கைகள் தான் தடவி
கொளுப்பென்று கிளு கிளுக்கும் .

வெண்டையென நீளும்
சுட்ட தந்ததின் பழுப்பில்
நர்த்தனமிடும் விரல்  இடுக்கில்
உயிர் சிக்கி  தவிக்கும் .
நூல் கொண்டு தாங்கும்
இடை தோல் கொண்டு போர்த்தும்
ஆடை ஒன்றின் நூல் விடுதலைக்காய்
அலையும் மனது அடம்  பிடிக்கும் .

அவள் அங்கங்கள் யாவும் தங்கமயம்
அதன் விம்பங்கள் யாவும் இன்ப மயம்
பிரம்மன் தேன் சுவைத்து தீட்டிய கன்னியவள்
ஒரு மோகத்தின்  போகம் .

ஆரத் தழுவும் ஒரு அக்டோபஸ் என அவயங்கள்
ஒரு கலவி முடிதலில் ஆதாமும் ஆகலாம்
இல்லை கனி தவிர்த்து ஆத்மாவினால் நீ புத்தனும் ஆகலாம் .