Monday, August 12, 2013

தூக்கம் வரவில்லை

Photo: கண்ணதாசன் கருணாகரன் கொடுத்த தலைப்பு இது " எனக்கு உறக்கம் வரவில்லை "

நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்  
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம் 
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி 
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் . 
நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம்
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் .

முனைந்து முனைந்து

Photo: முனைந்து முனைந்து 
முடியாமையின் 
விளிம்புகள் நோக்கி 
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து 
முனைந்து முடியாமல் 
பலர் எழுதும் காதல் கவிதைகளில் 
முனைந்து வழிகிறது 
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம் 
திருவோடு ஏந்தும் 
தெரு நாய்களோடு கூடும் 
பிச்சைகாரர்களின் தட்டில் விழும் 
பருக்கை சோற்றில் 
முனைந்து நகர்கிறது 
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை 
கடிந்து உமிழும் வெஞ்சினம் 
முனைந்து கடக்கிறது 
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி 
உருப் பெற்ற போராட்டம் 
சதிகாரர் வலையில் சிக்கி 
முயன்று முனைந்து 
சுவாசிக்க துடிக்கிறது 
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு 
அலங்கார தீபமிட்டு 
இவைக்கான காத்திருப்புகள் 
இன்னும் முயன்று பயணிக்கின்றன 
அதன் முடிவை தேடி 
முனைந்து முனைந்து
முடியாமையின்
விளிம்புகள் நோக்கி
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து
முனைந்து முடியாமல்
பலர் எழுதும் காதல் கவிதைகளில்
முனைந்து வழிகிறது
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம்
திருவோடு ஏந்தும்
தெரு நாய்களோடு கூடும்
பிச்சைகாரர்களின் தட்டில் விழும்
பருக்கை சோற்றில்
முனைந்து நகர்கிறது
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை
கடிந்து உமிழும் வெஞ்சினம்
முனைந்து கடக்கிறது
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி
உருப் பெற்ற போராட்டம்
சதிகாரர் வலையில் சிக்கி
முயன்று முனைந்து
சுவாசிக்க துடிக்கிறது
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு
அலங்கார தீபமிட்டு
இவைக்கான காத்திருப்புகள்
இன்னும் முயன்று பயணிக்கின்றன
அதன் முடிவை தேடி