Sunday, January 27, 2013

துணுக்கு

 

உன் நினைவுகளின் இருப்பு
உன் மீதான காதல்
நம் பிரிவு
நிமிடத்தில் எழுதியவை

வெறுமைகளின்
வறண்ட நிலத்தில்
சில பசுமை விதைகளாய்
உன் புன்னகை
தூறல்

என் கனவுத்தேரை
கடுகதியில் அழைத்து
இழுத்து செல்லும்
நினைவுகளே நீங்கள்
சில்லுகள்

விரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை வனத்தினுள்
வழிகாட்டியாக
அவ்வப்போது உன் வார்த்தைகள்
கொசுத் தூறல்

மனம்



தெருவோரம் நின்று திரும்பி பார்த்தேன்
என் மனவோரத்தை போல
பல மேடு பள்ளங்கள்
குப்பை கூளங்கள்
குட்டைகள்
கோவில்
சுடுகாடு
பூவனம்
என நிறைந்து வழிந்து கொண்டிருந்தது ..