Monday, September 15, 2014

குறை நிலவு..




இந்த
இரவுகளின் மடியில்
எழுதப்பட்டு இருக்கிறது
என் தனிமைகளின் விதிகள் ..

உறக்கமற்ற
இரவுகள் பல கடந்தாலும்
உதிரம் உறைந்த
இரவுகள் அணைக்கிறது
விடியல் காணாத
விட்டில் இவள் ..

முடியாத நினைவுகளுடன்
போராடும்
முகவரி தொலைத்த
குறை நிலவு..

உன் சிதறிய புன்னகையில்
உதறிய
என் காதலை தேடுகிறேன் ..
உன் காலடியில்
காய்ந்து கிடப்பதை
அறியாமல் ......