Thursday, August 30, 2012

மோகம்

 
நிலவொளுகும் நீள்வானும்
தன் நிலை உருகும் இராக்காலம்
மனதருகே நீ
மனச்சுவர்களில் சாய்ந்தவண்ணம்
மோகனமாய் உதிர்க்கும் புன்னகை
மல்லிகையின் நறுமணத்தை விஞ்சி
என் மனதுள் மணம கமழ செய்யுதடா ...



செவ்விதழ் தான் தொட்டு
வரிசங்கு கழுத்தாரம் பட்டு
தோளது தான் விரவி
மலர் கரம் சேரும் போது
மது கொண்ட மலராய்
உன் நெஞ்ச மஞ்சத்தில்
மடி கொள்ளும் என் சிரசும் ...


ஏக்கங்கள் எம்பி குதிக்க
எண்ண ஓட்டங்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல
அதன் தாக்கங்கள் இதய ஒலியில் தடதடக்கும் ...
மனம் கெஞ்சும் மேலும் மதுவுக்காய்
மதி கொஞ்சும் விடுதலைக்காய்
கொடி இடை தாங்காது
கொழுகொம்பாய் உன்னை பற்றும் ..


எண்ணகளில் வண்ணமாய் நீ ஆழ
ஏக்கம் தேக்கும் என் தனிமை நினைவுகள் ...
தொலைவினில் இருந்தாலும்
நிலவினில் நீ தெரிவாய்
அமாவாசைகளை இருட்டடிப்பு செய்தவண்ணம் ...

Wednesday, August 29, 2012

வறட்சியின் கோலம்

 
 
 
உன் அலட்சியத்தின் கட்டவிள்ப்பில்
கர்பபிளக்கிறது நம் காதல்
கலைந்து போன கோலங்களாய்
கனவுகள் சிதறி கிடக்கின்றது ..


மூச்சிரைக்கும் வரை
முத்த வேள்வியில் புரண்ட இதழ்கள்
வறட்சியின் கோலத்தில்
வெடித்து சிதறுகிறது
பற்களின் அழுத்தத்தில் .....


இறுமாந்திருந்த இதயம்
இணையற்ற பறவையாகி
இறக்கைகள் துண்டாடபட்டு
இரத்த வெள்ளத்தில் மூச்சு திணறுகின்றது ...


எங்கிருந்தாய்
எனக்குள் வந்தாய்
என் உயிர் மீது உலாவந்தாய்
உயிரற்ற ஓவியமாய்
உன் நினைவுக் கிறுக்கல்களில்
உன்னை தேடி அலைய வைத்தாய்


தனிமை சிறையில்
தத்தளிக்கும் என் உணர்வுகள்
விடுதலைக்காய் ஏங்குகின்றது
விருப்பம் இல்லாவிடினும்
விழிப்பார்வை ஒன்றை வீசிவிடு
விடுதலை பெறும்.............

கரும்பாறை

 
 
 
 
இருளை விழுங்கி
ஒளியை உமிழ்ந்து கொண்டு
நிலவு நகர்ந்து கொண்டிருந்தது
என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....

என் மன சிறகில்
உன்னை மணாளனாய் வரித்து
பயணிக்க துடித்தேன் - நீயோ
வெட்ட வெளி தன்னில்
கரும்பாறை போல் இறுமாந்து இருக்கின்றாய் ..

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..

இன்பத்தை விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது....

காணமல் போகும் கனாக்களை
தேடி தேடியே நான்
நடைப்பிணம் ஆகிறேன் ..

இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...

Tuesday, August 28, 2012

காதல் பரிசாக



எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....


அன்றிலாய் உன்னுள்
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..


ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..


குருதிக் கிடங்கில்
குளித்து கிடக்கும்
குட்டி இதயம்
குடை சாய்ந்து குமுறுகிறதே
கண்களுக்கு குற்றாலமும்
மனதுக்கு மயானமும்
நினைவுக்கு நிழலையும்
காதல் பரிசாக தந்தவனே


உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேன்

எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....
 

நம் காதல்





தொலையாத இரவிலும்
தொலைகின்ற நினைவிலும்
தொடராய் தொலைகிறது - என் காதல்


பால் நிலவும் பருவத்து அடிமை
பகல் நிலவு இவளும்
பருவத்து காதலுக்கு அடிமை
தினம் ஒரு பார்வையில்
தித்திக்கும் நினைவு
தீப்பற்றி கொள்ள வாழ்கிறது -நம் காதல்


முத்தமிட்டு செல்லும் -உன்
மூச்சு காற்றை சுமந்த
தென்றல் சொல்கிறது நீ
சுமக்கும் நம் காதலை ...


நீ சிந்தும் சிரிப்பில்
சிதறி தவிக்கிறது என் மோகம்
பற்றிக் கொள்ள பலதடவை ஏங்கினாலும்
சில முகத்திருப்பலில் முழுமை அடைகிறது மோகம்..

Wednesday, August 22, 2012

காத்திருகிறது...

 

இருளை கிழித்து
ஒளியை
உமிழ்ந்து கொண்டிருந்தது நிலவு ..
என் பார்வை வட்டத்துள்
பதியும் அனைத்து காட்சிகளிலும்
அலையாக உன் முகம்
அடிகடி தோன்றி
என் நிகழ்வுகளை
இருட்டடிப்பு செய்த வண்ணம் ..

உன் வரவுக்காய்

காத்திருந்த மனதுள்
அமாவாசையின் ஆக்கிரமிப்பு
அரங்கேறிகொண்டிருந்தது ...
சமுத்திரம் சடுதியாய்
கண்களில் குடி புகுந்தது ..
உடைந்து சிதறும்
நீர் திவலைகளிலும்
உன் முகத்தை
செதுக்கிச் சென்றது
இரக்கமில்லாத உன் நினைவலைகள் ...
 
உன்னை காண துடிக்கும் இதயம்
கவிழ்ந்து படுத்து
கண்ணீர் விடுகிறது
கட்டி அணைக்க நீ இன்றி ...
ஒரு வேளை உணவுக்காய்
யாசகம் கேட்கும் பிச்சை காரியாய்
ஒரு முறை உன் முக தரிசனத்துக்காய்
முணு முணுக்கிறது மனது ...

எங்கே சென்றாய் ...?

என் பௌர்ணமியை
அமாவாசையாக்கி ...
என்று வருவாய் ..?
ஸ்ஸ்ஸ் .....
காலடிச்சத்தம்...
என் கனவுகளை சுருட்டி வைத்து
நிகழ்வுக்காக காத்திருக்கும் கண்கள் ...
ஏக்கத்துடன் மனது ...
ஏமாற்றத்தையும் எதிர்பார்த்து
காத்திருகிறது உனக்காய்...

Tuesday, August 21, 2012

என்றும் காதலோடு ...

 



 பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..

உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....

என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......


நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...

இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
                                                         என்றும் காதலோடு ...

Monday, August 20, 2012

உதறபட்ட உணர்வு...

 
என்றோ ஒருநாள்
என்னை நீ பார்ப்பாய்
எதிர்பார்ப்பில் வளர்த்தேன்
என் இனிமையான காதலை
பார்த்தாய் .. பார்த்தாய்
பற்றி கொண்டது பரவசமாய் இதயங்கள்

இடறி விழும் போதெல்லாம்
இதமாய் தாங்குவாய் என்று
இருளிலும் நடை பயின்றேன்
வெளிச்சமாய் நீ வருவாய் என்று
இயற்கையாய் இருந்த ஒளி கூட
ஒழிந்தோடி போனதடா ..
இடறி விழுந்து..
இதயம் காயமானது ...

உன் வார்த்தையில்
உடைந்து போன என் இதயம்
ஒவோன்றாய்
உன் நினைவு சிதறல்களை
பொறுக்கி எடுத்து
ஓட்ட வைத்து
துடிக்கின்றது ....

கருகி போன இதயத்தில்
காதலை தேடி பார்கின்றேன்
சாம்பலாய் அது இன்னும்
உன் பெயர் சொல்லித்தான்
உயிர் வாழ்கிறது ...

உதறபட்ட உணர்வுகளுக்கு
உன் அலட்சியங்களை
சொல்லிப் பார்கின்றேன் ..
உன்னவன் தானே
உருகிவிடு என்கிறது உணர்வு ..

தன்மானத்துக்கு சவால்விடும்
என் காதலுக்கு
நானும் பலி என் மனதும் பலி ...
தினம் உன் நினைவில்
சந்தோசமாய்தான் சாய்கிறேன்
சகதியாய் நீ கழுவி சென்ற போதும்..

Thursday, August 16, 2012

வளர்ச்சி

 
குரங்கில் இருந்து
குலம் தோன்றியதாய்
குல பெருமை பேசும் மானிடா
குரங்கை விட கேவலமாய்
நீ போன கதை என்னடா ...?

ஐந்தறிவு ஜீவனிடம்
உயிர் பெற்று வந்தவர்தாம்
அணு அணுவாய்
ஆக்கம் கண்டு
அகிலத்தையே
ஆட்டிபடைக்கும்
வித்தைகள் கற்று கொண்டீர்

உன் உழைப்பில்
நீ உயர்ந்த போது
உன் வளர்ச்சியில்
நிமிர்வு தெரியுதடா
உடல் உழைப்பால்
உயர்வுகண்ட உன் நிமிர்வு
இயந்திரத்தின் பிடியில்
இயல்பிழந்து போகுதுபார்

கணனியின் முன்
கட்டிழந்து காலம் மறந்து
கருத்தை பதிபவனே
உன் நிமிர்வு உருக்குலைந்து
போகுது பார் ....
உலகை வென்ற மமதை உன்னுள்
உன்னை வென்ற உவகை உலகுள்

மந்தி இனம் பிரசவித்த
மகத்தான மனித இனம் நீ
ஆனால் உனக்குள்
மமதை மனவீக்கம் என
மாசுகள் நிறைந்து
மருகிழந்து போகின்றாய்

உன்னை பிரசவித்த உன் இனமே
உன் கருவில் உதிக்க மறுக்கிறதே
உனக்கு பிறந்தால்
மந்தி இனமே
மதி இழந்து மகிமை இழந்து போகுமென்றா ..?

மந்தியோடு மனிதனை
மறந்தும் ஒப்பிடாதீர்
ஆறறிவு ஜீவன் என்று
அலம்பல் செய்துகொண்டு
அட்டூழியம் செய்வதற்கு
ஐந்தறிவு ஜீவனாய்
அது போக்கில் வாழ்வது மேன்மையடா ...

வளர்ந்து விட்டோம்
வென்று விட்டோமென
வாய் கிழிய போசுபவனே
நீ உன் வளர்ச்சி பாதையில்
விட்டு வந்த எச்சங்களை பார்
உன் வளர்ச்சியின் மேன்மையும் தெரியும்
வாழ்கையின் நீ இழந்த வசந்தமும் தெரியும்
உன் வளர்சிக்கு தலை வணங்கும் நான்
உன் இழப்புக்கு மனமும் வருந்துகின்றேன் ..

பண்டிகை நாள் ...



காலம் கடுகதியில்
கண நேர தயக்கமின்றி
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
காலத்தின் ஓட்டத்திற்கும்
வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும்
வாய்க்குள் கூட
வருவதை திணித்துக்கொண்டு
காலில் ரெக்கை கட்டிய கூட்டங்களாய்
இன்று மனித இயந்திரங்கள் ..
புலர்ந்ததில் இருந்து
புணர்தல்வரை
வேகம் விவேகமற்று
போய்கொண்டேதான் இருக்கிறது ...


எஸ் எம் எஸ் உம்
இ மைலும்
இதயங்களை இணைக்கும் காலத்தில்
உறவுகளையும் இவைதான்
இணைக்கின்றது ...


முகம் பார்த்து
முகவரி சென்று
முகமன் கூறும் வழக்கமெல்லாம்
முகபுத்தகம் ... இணையதள வழியால்
இனிதாகத்தான் நடகின்றது
மாமன் மச்சான் என்று கட்டி தழுவுதலும்
மாமி மாமா என்று மரியாதையை செய்வதும்
அக்கா தங்கை என கட்டி கொள்வதும்
அரிதாக போய்விட்டது ..


ஒரு மின் அஞ்சலிலும்
எஸ் எம் எஸ் இலும்
ஹாய் ஹவ் ஆர் யு ...
கேட்பதிலும் அடங்கி போய்விட
எங்கே நம் கலாச்சாரம்
இடிவிழுந்த பனை மரமாய்
மொட்டையாய் போய்விடுமோ
என்ற அச்சம் தலை தூக்க....
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும்
பேணி காக்க ...
பண்டிகைகள் நாம் இருப்பாதாய்
மார்தட்டி கொள்கிறது ...

வாசல் தெளித்து கோலம்
வகை வகையாய் பலகாரம்
வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன்
வேபில்லையாட்டும் மாமி
விழுந்து விழுந்து படிக்கும்
அக்கா அண்ணா தம்பி தங்கையர்
எப்போதும் அலுத்துகொள்ளும் அப்பா
அடுப்பங்கரையில் அடைந்து கொள்ளும் அம்மா
அயல்வீட்டு அருமை நபர்கள்
அனைவரும் ஒன்று கூடி
அழகாய் பொழுதை கழிக்கும்
அழகான பண்டிகை நாள்

அனைவர் முகத்திலும்
அத்தி பூத்தால் போல்
அவளவு சந்தோசம் ....
இதன் புண்ணியத்தை பெருமையை
கட்டி கொள்வது
பண்டிகையா ...?
இல்லை பண்டிகையை
விடுமுறை நாளாக்கிய
நம் பாரதத்து தலைவர்களா ...?

எது எப்படியோ
ஒன்று கூட ஒரு நாள்
உலகை ரசிக்க ஒருநாள்
தின்று கழிக்க ஒருநாள்
திகட்டும் வரை பேச ஒருநாள் ..
இந்த ஒருநாள் ..
ஒவொரு நாளும் வாராதோ
ஏக்கத்துடன் .....

என் தவம்..

 
 
 
காதலால் இருவர்
கருத்தொருமித்து
வாழ்தலாம் திருமணம்
காதலால் இணையாது போனாலும்
காசால் இணையும்
பல பந்தம்
பலமற்ற பந்தம் ....


கால மாற்றத்தில்
காசும் மாறி
கனவுகளும் மாறி
காலத்துக்கும்
கவலையை தரும் பந்தம் தவிர்த்து
உன்னை காதலால்
கை பிடிக்க நினைத்தேன்
என் கண்ணாளனே...


தினம் பல கனவு
தித்திக்கும் கனவு
விடிந்ததும் திகட்டும் உலகு

பூ பந்தலிட்டு
புது மனைகள் தான் இட்டு
மணமகளாய் நானும்
என் மன நாஜகனாய்
என் மணாளனாய்
என்னருகில் நீ
உன்னருகில் நான்

காஞ்சி பட்டும்
கரை வேஷ்டியும்
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள
அவப்போது அசையும் கைகள்
அடிகடி பட்டுக்கொள்ள
முட்டிக் கொள்ளும் உணர்வுகள்
மூச்சை அதிகரிக்க ...
அவசரமாய் பரிமாரிகொள்ளும்
கடைக்கண் பார்வையில்
உன் கண் சிமிட்டலில்
வெட்கம் வேள்வியில் தகிக்கும் ...


மற்றாரும் உற்றாரும்
சுற்றமும் சூழ நின்று
மங்கள வாத்தியம் முழங்க
மங்கள நாண்...
நீ மகிழ்வுடன் சூட்டும் நேரம்
என் மனமெங்கும் நீ நிறைவாய் ..
என் மனதெல்லாம் பூ சொரிவாய் ..


ஏக்கங்களும் தாபங்களும்
இடை விடாத ஞாபகங்களும்
இடை விடாது பற்றி கொள்ள
வாழ்த்து கூறுபவரும்
வர்ணனை செய்பவரும்
கருத்தில் அல்ல
கண்ணில் கூட பதிய மாட்டார்கள் ...
புகை படம் பிடிபாதாய் கூறி
உன் தீண்டலில் என்னை
என் உணர்வை சிதைக்கும்
புகைப்பட பிடிப்பாளர்
உன்னிடம் புண்ணியம் கட்டிகொல்வார்

புரிந்தும் அறிந்தும்
புரியாமல் அறியாமல்
இருப்பதில் சுகம் ...
எதனை சுகம் ...
இணை பிரியாத துணைவியாய்
இன்ப மயக்கத்தில்
உன் இதய சுவர்கத்தில்
என்றுமே உன் ராணியாய்
உலாவரும் இனிய வரம் வேண்டும் ...


அம்மா பால் .....
எங்கயோ ஆழமாய்
ஒரு குரல் ஒழிக்க
மெதுவாய் தூக்கம் கலைகிறது
என் துயர் படிந்த
இன்ப கனவும் கலைகிறது ..

வாழ முடியாத வாழ்வை
கனவிலே வாழ்ந்த சுகத்துடன்
மீண்டும் கனவுகளுக்காய்
இரவினை நோக்கிய
என் தவம் தொடரும் ...

தொலைத்தேன் ...





உனக்காக அலைந்தேன்
என் கால்
ரேகை தான்
அழிந்தது ...
உன் இதயத்தில்
என் பாதச்சுவடு
பதியவே
இல்லை...

தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறை நிலவை போல
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...
மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
கதிரவனை போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...

நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது உன் நினைவுகள்...

உன்னை நான்
பார்த்த நாளிலிருந்து
என் இதயத்தை
தொலைத்தேன் ..

நீ என்னை
பார்த்த நாளிலிருந்து
என் தூக்கத்தை
தொலைத்தேன் ...

உன் மார்பை
தொட்டிலாக்கி
எனை தாலாட்டி
உறங்க வைப்பாயா....'?


என் ஆசைகள் எல்லாம்
கருவிலேயே
தொலைந்து போகின்றன..
உன்னை காதலித்த நாள்முதல் ....

உனக்காக கவிபாட பலர் இருந்தாலும்
இது எனக்காக நான் பாடும் கவிதை....

அடுத்த காதலர் தினத்தில்
உன்னுடன் நான் வாழ
வரம் கேட்கவில்லை
என் நினைவுகள் உன்னிடம் வாழ
இடம் கேட்கின்றேன்
உன் இதயத்தின் ஓர் ஓரத்தில்

Saturday, August 11, 2012

Thinking of u

Lots of hugs and kisses

Be Mine

Bird Be Mine Card

Be Mine

always...

I like you to be with you

i like you

Like You Card 5

i love u sweet heart...

Love You Card 9

our love

Love and Bonding

mmmmmmmmmmmmmhhh..

I Love You

i love u sweet heart..

Boy  And girl Love You Card

in my dreams...

kiss you gently

baby...

Love You Cute Card

lov u so much...

Love You Card 8

miss u lot

Love Miss You Card 4

i miss you...

Love Miss You Card 4

i miss you my love..

Miss You Card

Konchum kanavugal ....

7

Friday, August 10, 2012


அன்பே.....




என் விழிகளை பார்
நான் இழக்க போகும்
இனிய சொர்க்கத்தின்
வலிகளை சுமப்பது சொல்லும்


என் உதடுகளை பார்
சொல்ல துடிக்கின்ற
சொல்ல முடியாமல் தவிக்கின்ற
உணர்வுகளை சொல்லும்


மொத்தத்தில் என்னை பார்
அன்பே நீ இல்லாது
வாழ போகும்
தனிமையின் தவிப்புகளை சொல்லும் ..


உனக்குள் என்னை தொலைத்தேன்
திக்கு தெரியாத காட்டில்
திசை அறியா பறவையாய் நான் ...


Dear..



காத்திருகின்றேன்




காத்திருகின்றேன்
தனிமைகளில்
உன் நினைவுகளை
சுமந்தபடி ....
கரைந்து போகும்
நொடிகளெல்லாம் ...
கனக்கிறது நீ இல்லாமல் ...

Soul Mate



feel...



love u