Wednesday, May 14, 2014

விரகம்...



திறந்த மார்பில்
படர்ந்த எந்தன்
குழல் நீவி கேட்கிறாய்
அன்பே
தேனூறும் உன்
இதழ் சுவைத்தேன்
வெண்டனய
விரல் இணைந்தேன்
வாழை  தண்டுகள் இரண்டில்
மென் தலை அமிழ்ந்தேன்
எனினும்
என் நெஞ்சு கொண்ட பேறு
என் கைகள் கொள்ளாதோ
கண்கள் கண்ட
 மது கிண்ணம் நுகர
 இதழ்கள் வேண்டாவோ..

விந்தையாய் உன்
விழிகள் நுழைந்தேன்
விரக விதையில் வீழ்ந்தேன்
விருட்சமாய் ஆசைகள் வீழ
வேண்டுமோ என்றன விழிகள் ..

விழிகளின் விரகம் உணர்த்து
விரதம் உடைத்து
விருந்து காண விரைந்திடும்
விரல்கள் பற்றி
வினாவொன்று கொள்கிறேன்
மடை தீண்டி விடாதே
உடைந்து விடும் அணையின்
வேகமும் ஆழமும்
உன்னை உயிர் உருக்கொள்ள
செய்திவிடும்
உந்தன் கரு சுமக்க நான் தயார்தான்
காலமெல்லாம்
என்னை உயிர் சுமக்க நீ என்றால் ..