Tuesday, May 6, 2014

நினைவு...



உன் விலகுதல்கள்
நினைவுகளால்
நிரப்பப் படுகிறது ..
அதன் நிறைதலிலும்
வழிதலிலும்
உடைந்து சிதறுகிறது
புன்னகை பூக்கள் .

ஓர் நிலாக் கால
வெகு தூர பயணத்தில்
அமானுஷ்ய கணங்களாக
உன் பிரிவுகள் சுமந்து
நகர்கிறது பொழுது ..

அடிக்கடி
நினைவுகள்
கிள்ளிப்பார்கிறது
வாழ்தலின் நிச்சயத்தை
உன் விலகுதலிலும்
உயிர் வாழ்கிறதா என ..

உன் உறக்கங்களை
மௌனமாய் ரசிக்கிறேன்
ஒரு நிலவென நுழைந்து
நிறைகிறாய் ஒளியென ..
வரைகிறேன் உன்னை
வளைகிறாய்
என் நினைவுகளில் மட்டும் .

நிஜங்களை தொலைத்து
நினைவுகள் தேடிய பயணத்தில்
உதிரிகளாய் நிறைகிறாய்
உளமெங்கும் ..
உன் வளமெங்கும் வாழ்ந்துவிட
மனம் ஏங்கும் இவள் ....