Tuesday, July 3, 2012

என் கால்கள்



பசுமையாய் இருந்த
என் காதல் வனம்
புயல் அடித்த பூவனமாய் போனது
காடுகள் மேடுகள் தாண்டியும்
உன்னை தேடி என் கால்கள்
நகர்ந்து கொண்டே இருக்கிறது ..
உன்னை வெறுத்துவிட துடிக்கிறேன்
என்னை இறப்பு தழுவுமானால்

நினைவுகளுடன்





என் உணர்வுகளின்
ஒவொரு அணுவும்
உனக்காக ஏங்குகின்றது ...
உன் தீண்டலுக்காய்
உன் வாசத்தை சுவாசிக்கும்
தருணங்கள் வாய்க்குமோ
என் தேசத்திலும்
சில பூக்கள் பூத்திடுமோ..
அன்பே உன்னை நீங்கினாலும்
உணர்வால் நீங்காத உன்னவள் ..
உன் நினைவுகளுடன் ...

நினைவுகள் என்னுள் வாழும் ..





உன்னால் ஒதுக்கப் பட்டவள்
உன்னை விலகி செல்கிறேன்
உன்னை மட்டுமே விலகி செல்கிறேன்
உன் நினைவுகளை அல்ல ..
தொலைவினிலே நீ இருந்தாலும்
தொலையாது உன் நினைவுகள் என்னுள் வாழும் ..