Wednesday, February 27, 2013

மாவீரரே ...



 
மாவீரரே ...
தமிழ் ஈழம் எனும் வாகைகாய்
உங்கள் வேர்கொடுத்த விழுதுகளே ..
தமிழ் ஈழத்தின் மயில் கற்கள் நீங்கள்
ஈழ கனவுகளை மனதெல்லாம் சுமந்து
மரணத்தின் விளிம்பிலும்
உதிர்த்து மரித்த தேசபக்தர்கள் நீங்கள்..
கால பதிவேட்டில் தமிழ் ஈழம் என்ற சொல்லை
பதிவாக்கி சென்றோரே ...
மரணத்தை அழைத்து மனுகொடுத்த மாவீரரே
மரணம் பார்த்து பயந்த மறவர்கள் நீங்கள் ...

நாளாந்தம் எம் உணர்வுகளோடு உறவாடும் உங்களை
மாதம் தேதி குறித்து நினைக்கவில்லை ...நிதம்
மனதார நினைகின்றோம் ..
மரணத்தின் வாயிலில் எம் இனம் மரணத்தை புசித்தபோது
ஓடி வந்து தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள் நீங்கள் ..
தேசமே அழுகுதுபார் ... உன் தீவிர தேசபக்தி கண்டு .

உயிருளும் மேலானது மானம்
மானத்தை விட உயிர் பெரிதல்ல ...
துச்சமாய் மதித்து துறந்தீர் தமிழன் மானம் காக்க .
கண்ணை இமை காப்பது போல்
மண்ணை காக்க மரணத்தை சுகித்தீரே ..
மரணம் பெருமை கொள்ளுதடா
மாவீரா உன் தீரம் கண்டு ...

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தமிழுக்காய் தமிழ் இனத்துக்காய்
தமிழ் தேசத்துக்காய் ஈகமாய் தந்தவரே
நீங்கள் செத்தவர்கள் அல்ல
செதுக்கபட்டவர்கள் .. தமிழ்
பதிவாக்கி சென்றோரே ...
மரணத்தை அழைத்து மனுகொடுத்த மாவீரரே
மரணம் பார்த்து பயந்த மறவர்கள் நீங்கள் ...

நாளாந்தம் எம் உணர்வுகளோடு உறவாடும் உங்களை
மாதம் தேதி குறித்து நினைக்கவில்லை ...நிதம்
மனதார நினைகின்றோம் ..
மரணத்தின் வாயிலில் எம் இனம் மரணத்தை புசித்தபோது
ஓடி வந்து தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள் நீங்கள் ..
தேசமே அழுகுதுபார் ... உன் தீவிர தேசபக்தி கண்டு .

உயிருளும் மேலானது மானம்
மானத்தை விட உயிர் பெரிதல்ல ...
துச்சமாய் மதித்து துறந்தீர் தமிழன் மானம் காக்க .
கண்ணை இமை காப்பது போல்
மண்ணை காக்க மரணத்தை சுகித்தீரே ..
மரணம் பெருமை கொள்ளுதடா
மாவீரா உன் தீரம் கண்டு ...

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தமிழுக்காய் தமிழ் இனத்துக்காய்
தமிழ் தேசத்துக்காய் ஈகமாய் தந்தவரே
நீங்கள் செத்தவர்கள் அல்ல
செதுக்கபட்டவர்கள் .. தமிழ்
மக்கள் மனதில் பதிக்கப்பட்டவர்கள் ..


வேங்கையாய் பாயும் வீரியத்தில்
ஓர் வீர யுகம் கலந்திருக்கும் ..
உதிரம் கொடுத்து உரிமையை பேசும்
உங்களின் ஈகம் உயர்ந்ததடா
பல துரோகங்கள் மத்தியில்
துண்டாடபட்ட எம் ஈழமண்ணின்
எழுதுகோல் நீங்களடா ...

உறவுகள் கூடி உல்லாசமாய் பொழுதாடும் நாளல்ல இது
நம் உணர்வுகள் கூடி உரம் தேடும் நாளிது ..
அழுது அழுது ஆறேன கண்ணீர்
கல்லறைகளை அனைப்பதால்தான்
அர்த்தம் பெறுகிறது மாவீரர் துயிலும் இல்லங்கள் ..
அங்கு சந்தண மேனியர் சாய்ந்து உறங்குவதால்தான்
அமங்கலமே மங்கலமாய் மணம் வீசுது ...

சத்தியநாதன் சங்கரோடு தொடங்கிய
தமிழ் ஈழ ஈகை பயணம் ..
சத்தியத்தை காக்காது போய்விடுமோ ..
தளராத முடிவோடு களமாடி சாய்ந்தீர்
இன்று தமிழ் ஈழம் கனவாகி போய்விடுமோ ... வாரீர் ...

வேங்கையாய் வீறு கொண்டவரே
மரணத்தை தேங்காயாய் மென்று துப்பியவரே ..
தீ காங்குகள் கூட தீரம் இழந்தது உன்னை தீண்ட
ஆழ கடல்களும் அதிர்வு கொண்டது உங்கள் அசைவுகண்டு
பாச மனங்களும் பதறி துடித்தது பிரிவு கண்டு ...
உங்கள் ஆன்மா உருகிய ஈகை தீயில்
எரிந்து கருகியது எதிரிகள் மோகம் ...

மாவீரரே எந்த கனவினை சுமந்து
தமிழ் ஈழ சுதந்திர சொர்கதிர்காக
காலத்தோடு கலந்தீர்களோ ..
அந்த ஈகத்தை தாகமாக்கி
தவழும் தமிழ் ஈழம் வெகு விரைவில் ...

தனித் தீவின் கரை



 

தனித் தீவின் கரைகளை போல்
அவ்வப்போது உன்
உடல் தீவின் கரைகளை
எட்டிப் பார்க்கிறது
என் எண்ண  அலைகள் ..

உன் நெஞ்சில்  நுரையாக
என் எண்ண  நுதல்கள்
ஒட்டி என் தேக வெப்பத்தை
உள்  உறிஞ்சி
என்னுள் உறுதியை
உடைத்து சிலிர்க்கிறது ..

கரை தடவும் நண்டுகள் போல்
நுரை தடவி நுதல் தடவி
இதழ் கரை கடந்து
காம சந்துக்குள்
ஒளிந்து கொள்ள துடிக்கிறது
ஒற்றை விரல் ...

செவி கடந்து கேட்கும்
அலை கடலின் ஓசையை போல்
உன் இடை படர்ந்து
இசைபாட துடிக்கிறது
என் இன்ப லயம் ...

வா வந்துவிடு
என் வளை கரத்துள்
வசமிழந்து
வாய் குளறும் பொழுதுகள் நீள்வதட்காய் ...