Wednesday, November 8, 2017

உனைத் தந்தேன்..

கலவி கொள்ளாது
கருவினில் சுமக்காது
மகவாக உருமாறிய
காதல் நீ..

உனக்காக
உனை தந்தேன்
உருமாறி
நான் நின்றேன்
எனக்காக
எதை தந்தாய்
ஏமாற்றம்
அதையீந்தாய்...

மதிப்பிழந்த
மாந்தளானேன்
மனமுடைந்து
பேதையானேன்
கொதித்தெழுந்து
குமைந்தொரு
வார்த்தை பெயர்ந்தால்
குலைந்துவிடும்
உன் குலம் நாசம்..

வேண்டாம்
வாழ்ந்துவிட்டுப் போ
வாழ்த்தி விடை பெறுகிரேன்.