யாரும் அற்ற
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...
இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .
சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை
எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...
இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .
சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை
எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .