Monday, August 3, 2015

புதைத்து..



இருள் கிழித்த
நிலவொன்று
காணாமல் சென்றிந்தது
விழி விரித்து
நோக்கிய யாவிலும்
இருள் படர்ந்து
எதுவும் புலப்படவில்லை ...

கண்களை கூசி சுருக்கி
விழித்து உருட்டி மடித்து
இமைத்து ...
எந்த வித்தையும்
எடுபடுவதாய் இல்லை ...

சரி
கைக்கெட்டுமா
இரு கை வீசி
துளாவித தேடுகிறேன்
தொலைத்த இதயத்தை ..

அதை
மீண்டும்
மீண்டு வராமல்
புதைத்துவிட ...