Monday, February 4, 2013

நம்பிக்கை எனும் நூல்

  

எங்கெங்கோ பிறந்தோம்
எதிராளிகள் போல் சண்டை போட்டோம்
ஏமாந்த பொழுதெல்லாம்
ஏமாறுபவர் தலையில்
மிளகாய் அரைத்தோம்
இறுமாந்த  பொழுதெல்லாம்
வெறுமாந்து பொழுதுகளாய்

நட்பு  என்பது ஒரு கூடு
அதில் நம்பிக்கை என்பது நூலு
கூட்டில் ஆயிரம் ஆயிரம் பறவைகள் மாறலாம்
அன்றிலாய் சில பறவைகள் வாழலாம்
தென்றலாய் பல புயல்களும் வீசலாம்
தெரிந்தே பல பிரிவுகள் நேரலாம்
தெவிட்டாத பல நினைவுகள் வாழலாம்
நித்தம் நித்தம் பல இன்பங்கள் சூழலாம்
நினைவுகளே சந்கீதமாகலாம்
நீ இன்றி நான் இல்லை எனும்
கதி ஒன்றும் தோன்றலாம்
உன் தோல்விகள் எல்லாம்
பல கண்களில் கண்ணீரும் ஆகலாம்
எட்டாத உயர்வுக்கு நீ சென்றும் வாழலாம் 
எள்ளி நகையாடுவோர்க்கு
எஹ்ஹு போல் வளையாது நிற்கலாம்
வற்றாத ஜீவநதியாய் வளங்கள் பல தோன்றலாம்
கட்டாத கோவிலுக்கு தெய்வமும் ஆகலாம்
காலம் தவறாத  பூஜைகளும் நடக்கலாம்
கடை கண் பார்வைக்கு கன்னியரும் ஏங்கலாம் ..
கான்போர்கெல்லாம் கண்ணியமாய் தோன்றலாம்
இவை எல்லாம்
நட்பெனும் கூடு இணைத்த
நம்பிக்கை எனும் நூல் அறும்  வரைதான் .