Tuesday, April 23, 2013

மெழுகு

 


தன் ஜீவிதம் அழிவதற்காக
எந்த மெழுகு திரியும்
கவலைப் படுவதில்லை
தான் உருகி
தனை ஏற்றியவனுக்காகவே
உருகி ஒளியை பிரசவித்து
பிரவகித்து மடிகிறது .

உருகும் மெழுகின்
கொதிக்கும் வெம்மை என
மனதின் ஓரங்களில்
வெறுப்பு விரக்தி  மிருகத்தனம்
எல்லாம் தக தகக்கும் அவ்வேளையிலும்
என்றோ ஏற்றப்பட்ட மெழுகு
அதன் கடமையை நினைந்து
இன்று உருகி தீர்த்துவிட்டது .

அதன் வெம்மையில்
குளிர் காய்ந்த பட்சி ஒன்று
அதன் இணைதேடி இரை தேடி பறக்கிறது
உயிர் கொடுத்த மெழுகோ
உருகி ஒழிந்துவிட்டது .

இழப்பிலும் ஒரு
இனிய காவியம் எழதிய திருப்தியில்
உருகிய மெழுகும் அதன் மென்மையும்
விடை பெறுகிறது .