Sunday, July 22, 2012

என் எண்ணப் பக்கங்கள்




என் எண்ணப் பக்கங்கள்
உன் நினைவுகளால் மட்டுமே
புரட்ட படுகின்றது ...
நீ இல்லாத பொழுதை
என் இதயசுமையை
எனக்காக பாதி சுமக்கும்
என் கவிதை பதிவுகளே
என் கண்ணீரின் சுமைகளை
கண நேரம் தாங்கி கொள்ளுங்கள்
என் காதலன் வரும் நேரம்
என் கண்ணீர்
அவனிடம் என் மேல்
கழிவிரக்கத்தை
ஏற்படுத்திட கூடாது ......



முட்களாய் ......




உன்னை தேடிய
என் பயணமெல்லாம்
முடிவில்லாத பாதைகளில் தொடர
முடிந்தும்
முடியாமல் என் காதல்
முட்களாய் ......