Tuesday, May 13, 2014

விண்ணப்பம் ..



உயிர்வழி
உருகும் வலி
பருகிடும் நீ
பாவி என் பாதி ...

கதிர் ஒளிகாணா
காந்தள் இவள்
காய்ந்த சருகாய்
கனதியிழந்து கனக்கிறாள் ..

வற்றாத ஜீவ நதியில்
வழிந்தோடும்
நீர்  அலையில்
நினைவுச் சுழல் உந்த
நீர்ந்து தீர்கிறது ஆத்மா ..

எரிந்து கழிந்த
எதிர்பார்ப்புகள் எலாம்
ஏலம் கேட்கிறது
எதிர்கால ஆசைகளை
வருந்தி அழைக்க
வாய்பிளந்து கிடக்கிறது
வாழ்க்கையின்
பாதைகள் ..

விடிந்திடும் வானமதில்
விடியாத ஒரு பாகமென
முடியாத பந்தங்கள்
முடிச்சிட்டு மகிழ்கிறது
பிரியாத நினைவுகளிடம்
பிரியமாய் ஒரு விண்ணப்பம்
முடியாத கனவுகளை
முழுவதுமாய் எரித்துவிடு
முகவரியாவது எச்சமாகட்டும் ...