Saturday, August 1, 2015

கானல் ..



களைத்த
பொழுதுகளை
இரக்கமின்றி
சபித்துக்கொண்டே
பிடுங்கி கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை ..
வேரோடு ஊன்றி இருந்தால்
வந்துவிடும் ..
உயிரோடு ஒன்றி
பிரிய மறுக்கிறது ..

சில்லென்ற குளிரிளில்
திடீரென கொட்டும்
இந்த மழைத் துளிகளில்
கரைந்துவிட கூடுமோ ..
என்புவரை துளைத்த போதும்
எள்ளளவும் அது கரையவில்லை ..

வார்த்தைகளில்
பிரியத்தை தேடி
களைத்துக் கிடக்கிறது மனது ..
தேர்வு செய்து பேசுவதற்கு
இது பரீட்சை அல்ல
வாழ்க்கை
வாழ்ந்து பேசுகிறேன்
நீயோ
( எரிந்து  ) வீழ்ந்து பேசுகிறாய் ..

நானில்லாத இடைவெளியை
யாராவது
நிரப்பி விட்டார்களா
சொல்லு
நானாக சென்று விடுகிறேன்
நாளைப் பொழுதில்
என்னை நகர்த்தும் வேலை கூட
உனக்கு வேண்டாமே ..

என்னென்னவோ பேசவேண்டும்
என்பதாய் இருக்கிறது மனது
இப்படிதான் பேசவேண்டும்
என்கிறதாய் இருக்கிறது
உன் நகர்வு ..

தேடுகிறேன்
என்னை தொலைத்த
இதயத்தை ..
அது
காணாமல் போய்
ஒரு சில நாட்கள்
கடந்தது தெரியாமல் ...

வாழ்க்கையோடு
போராட வலுவிருக்கிறது
உன் வார்த்தைகளோடு
போராட ...
எங்கிருந்து பெயர்க்கிறாய்
என்மீது வீச ?
கல் நெஞ்சென்று
பெயர் போன என் நெஞ்சே
பிளந்து கிடக்கிறதே ...

ஆரம்பம் முதல்
இந்த நிமிடம் வரை
என் தேவை
ஒன்றாகவே இருக்கிறது
" எனக்கான ஓர் இதயம்"