Tuesday, September 18, 2012

காலம் முழுமைக்கும்

சிவப்பாய் அடிவானம்
சிவக்கும் மாலை காலம்
சில்வண்டும் சிறு நண்டும்
சிலு சிலுத்து கிறு கிறுபபூட்டும்
அலை வந்து கரை சேரும்
அரை நொடிக்காய்
அடிக்கடி ஏங்கும் கரைதனில்
அலைந்தாடும் எண்ணங்களோடு நான் ..


சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...


கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..
அவனோடான என் நகர்வுகளுக்கும்
இடைவெளி கொடுத்திருந்தால்
இந்த அவலங்களும் அலர்ந்து இருக்காதோ ...


மினுக் மினுக்கென
மின்னும் நட்சத்திரங்கள் அவனால்
மிகைபடுத்தி அலங்கரிக்கப்பட்ட
இது போன்ற ஒரு மாலை
நினைவுக்குள் வந்து போனது ...

நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .
 

எச்சி

alone full moon night picture and wallpaper

தெருவிளக்கின் ஒளி வீச்சில் ¨
விழிகளின் அங்கஹீனம்
விரட்டியடிக்க
விடை தெரியாத விட்டிலாய்
விழுந்து கிடக்கிறது
சாலையை நோக்கிய
என் காதல் பயணம் ..


புரியாத மேடுகளாயும்
தெரியாத கோடுகளாயும்
தெரிந்த சில கோணங்கள் ஆலும்
செதுக்கப்பட வாழ்க்கை
சிறிதும் சுவாரசியம்
அற்றதாகி விடுகின்றது
சில தோல்விகளின் முடிவில் ..


துயரத்தின் துயரை சுமந்தே
கண்களின் எடை அதிகரிக்கின்றது
அடிகடி நினைவலைகளில் மூழ்கும் போது...
கனவுகளை காவு கொடுத்த நெஞ்சம்
கதறி துடிப்பது
தெருநாய்க்கு கேட்டிருக்கும் போலும்
ஒரு பாடாய் ஊளை இடுகின்றது
ஊமையான என் உணர்வுகளுக்கு உடன்பட்டு ..


நிசப்தத்தின் ஆடை கிழித்து
நீளமாய் ஒரு கேவல்
நிதானத்தை இழக்க செய்கின்றது
ஆழமாய் நேசித்து
அவலமாய் உதறிய உன்னை நினைத்து ...


எச்சியாய் நினைத்து
எள்ளி நகையடியபின்
மனதறையில் பள்ளி கொண்ட உன்னை
பட்டென்று தூக்கி வீசிவிட முடியவில்லை
சட்டென்று தூக்கி வீச
தடுக்கி விழுந்தும் எழுந்து
உன் பெயர் சொல்லி துடிக்கும்
இதயத்து தெரியாது
அவமானங்களும் அலட்சியங்களும் ....