Wednesday, October 1, 2014

ஊடல் ..



உன்
மெல்லிய தீண்டலின்
பின்னான தேவைகள்
தெரிந்திருந்தும்
ஏனோ
உறவுக்குள்
உள்வர முடியவில்லை ..

நெகிழ்ந்திருந்த
சேலையின் கொசுவத்தில்
உன் விருப்பத்தின்
விண்ணப்பங்கள்
படர்ந்த வண்ணம் ...

உன் மூச்சின் வெப்பம்
கழுத்தினை
சூடேற்றிய பொழுதும்
குளிர்ந்த நிலவின்
மௌனங்களின்
நீட்சியாகவே
இருக்கின்றது ...

அதன் தேவை
எதோ ஒன்றாகவே இருக்கிறது ..
தொட்டதும் அலரும்
மலர் ஒன்றின்
ஒதுக்கம்
உணர்ந்திருந்த பொழுதும்
உதிர மறுக்கும்
அந்த ஒரு சொல்லில்
கட்டுண்டு
அவிழ மறுக்கிறது மலர் ..

மௌன விரதத்தின்
நீட்சியில்
உன் மனிப்புகள்
விண்ணப்பிக்கப் பட்ட
மறுகணம்
அலர்ந்துவிடுகிறது
உன் மீதான மையல்கள் .

ஏக்கங்கள் ...




ஓர் நிலவணைந்த
இராக்கலத்தின்
நட்சத்திரங்கள் என
மினு மினுக்கும்
கண்களின் அசைவில்
அவள் கனவுகளை
தேடிக்கொண்டிருந்தான்
அவன் ....

ஒளிவிளக்கின் வரிவடிவில்
செதுக்கிய சிற்பமாக
அசைவற்று
ஒருக்களிந்து சாய்ந்து நிற்கும்
அவள் உருவம்
உராய்ந்து சென்று கொண்டிருந்தது
அவனுள்
மோகத் தீ மூட்டி ...

அலைநின்ற அந்த
கூந்தலின் அசைவில்
அலைந்து கொண்டிருந்தது
மனக்குரங்கு ...

அந்தகாரத்தின்
அமைதிக் கடலில்
அவள் விம்மிய மார்பின்
ஏற்ற இறக்கங்களில்
இளமைப் படகு
அங்கும் இங்கும்
ஆடிக்கொண்டிருந்தது ...

திடீரென கடந்த
ஓர் சாலை வண்டியின் ஒளியில்
அவள் முகத்தில்
சட்டெனப் பதிந்த
பார்வையில் தெரிந்தது
வர்ணமற்ற அவள் சேலையில்
வர்ணகளுக்காய்
அவள் முக ஏக்கங்கள் ...

தென்றல்
இன்னும் வீசிக்கொண்டே இருந்தது
அவன் மனதில் மட்டும்
புயலாக ...

பெண்மை ..




துகில் கலைந்த
நிலவொன்றின்
வெம்மையோடு
புரண்டு கொண்டிருக்கும்
மோக நிலாவென
கவி சொல்கிறாய் ..

ஓர் உந்துதலில்
உன் இதழ்களை
இதழ் அடைந்த கணத்தில்
இம்சை எனதானது ..
வலிய உன் மீசை முடிகள்
மெல்லிதழ் உராய்ந்த கணங்களில்
நீண்டு வழிகிறது மோகம் ..

மெல் ஆடை துளையும்
உன் கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
ஆழ்ந்த சுவாசங்களில்
ஆண்மையின் தேவை
அதிகரித்திருந்தது ..

ஓர் அணை உடைக்கும்
ஆர்ப்பரிப்புகாய்
ஒவொரு கணமும்
காத்திருக்கிறது
அதன் ரகசியங்கள்
துறந்த பெண்மை ..

மோகங்ககள் ....







இரவின் சுகந்தங்களை
தென்றல் புணர்ந்துகொண்டிருக்கும்
அழகிய இளவேனில் காலம் ..

அருகினில்
துயிலாமல்
புரளும் எனை அணைத்து
இரகசியமாய் கேட்கிறாய்
வேண்டுமா என்று ...?

இரவின் ஆரம்பத்தில்
என் இளமைகளை
தூண்டாமல் இருந்திருந்தால்
வேண்டாம் என சொல்லிடலாம் ..

அத்து மீறும்
பார்வை வட்டத்துள்
அங்கமெல்லாம்
கூசி சிலிர்த்த பொழுதே
அடங்காத ஆசைகளை
அறிந்திருந்தாய் நீ ..

உதட்டுக் கடிப்பிலும்
விம்மித் தணிந்த
மார்பிலும்
விழுந்து மீண்ட
பார்வைகளுக்கு தெரியாதா
விரக காற்று
தீயை மூட்டியது ....

ஒரு மோன நிலையிலும்
உன் மீதான மோகங்ககள்
முட்டி மோதியதை
முகர்ந்திருந்தும்
என்னடா கேள்வி இது ..

இரவில் நாங்கள்
வெட்கம் கெட்டவர்கள்தான்
விருப்பமானவனிடம் ..

மனித நேயம் ...





வளர்ச்சியின் விளிம்பில்
தாகமெடுத்து
வறண்டு கிடக்கிறது

ரத்த வெள்ளத்தில்
புரண்டு கிடக்கும்
முகமறியா ஒருவரை
படம் பிடித்து
பரிதாப நிலைதகவல் போடும்
பருவத்தில் இருக்கிறது ..

பள்ளிக்கு சென்று
அகர லகரம்
கற்கும் பருவத்தில்
அடிகோடியில்
அடுக்களையில்
புரளும் நிலையில்
ஏக்கம் நிறைந்து
சிறுமியின்
தேடலில் நீள்கிறது ...

அடுத்தவர் வீடில்
எரியும் தீயில்
புகைப்பிடிக்கும்
அண்ணன் சொல்வதெல்லாம்
அடுத்தவர் பிரச்னை
நமக்கெதுக்கு ..
அவன் தீக்கங்கில்
தீய்ந்து கருகிறது ...

இன்றும்
விவாதப் பொருளாகி
கற்பனைகளில்
பேசப்பட்டு
கற்பழிக்கப் படுகிறது
பெண்களின் ஆடைகள்
அதில்
புண்பட்டு துவளும் மனது
புதிதாக தேடுகிறது ....

மனிதரே இல்லா சுழலில்
மனித நேயத்தை தேடி
எங்கனம் கரையேறுவது ?
இருந்தும்
ஒரு விடியலின் கரை தேடி
விவாதமாக
தொடர்கிறது
அன்றாடம்
தொலைக்காட்சியிலும்
மனித நேயம் ...

இந்த இரவு ........



இந்த
இரவுகளின் பிடியில்
ஏதோ ஒன்று
எஞ்சியிருக்கிறது .
உனக்கான நேசம்
உனக்கான அன்பு
உனக்கான காதல்
உனக்கான ஸ்பரிசம்
உனக்கனா முத்தம்
இப்படி ...

எனக்காக
கண்ணீர் மட்டும் ...