Wednesday, December 19, 2012

உலகம் முடியபோவதில்லை ..



பூமி அதிர வில்லை 
அடுத்தவர் புலன்களும் 
செயல் மறக்கவில்லை 
இருந்தும் ..
ஐம்புலனும் அடங்கி போக 
அடுத்த அடி வைக்க 
அவஸ்தைப்படும் 
அங்கஹீனம் உடையவன் போல் 
அங்கேயே துவள துடித்த கால்கள் ..

 உறை பனி தேசத்தில் 
உவப்பான ஆடை இன்றி 
உபதிரவபடும் உடலை போல் 
சில்லிட்டு சிலிர்த்து உதறியது உடல் ..
அதுகாறும் பல அவசரங்களுக்கு 
அவசியமாய் துடித்த இதயம் 
எங்கோ அடி ஆழத்தில் 
துடிபிழந்து துவளும் உணர்வு 

மனதெல்லாம் காதலை வைத்து 
அதை வெளியிட முடியாத காதலனை போல் 
திக்கி தவித்து தேடி சுழன்றது 
வரட்சின் தேசத்தை 
மொத்த குத்தகைக்கு எடுத்து 
இரக்கமற்ற மனிதர்கள் வாழும் தேசத்தில் 
மன பழக்கமற்ற அவன் ஆசைகள் 
எதிர் கால கோட்டைகள் 
ஒவொரு செங்கல்லாக 
விலை பேச பட்டுக் கொண்டிருந்தது ..

ஏன் இந்த அறிவிப்பு 
என்ன பிழை 
எங்கே தவறு 
எப்படி நடந்தது 
கல்லு விழுந்த குளம் போல் 
அந்த சொல்லு விழுந்து 
குழம்பி தவித்தது மனது ...

அதிகார வர்க்கத்தின் அலட்டல்களுக்கு தெர்யுமா 
உழைக்கும் வர்க்கத்தின் 
குடும்ப  சுவர்கள் எல்லாம் 
மாத இறுதியில் வரும் 
மடித்து வைக்கபட்ட 
சில ஆயிரங்களில் சாய்ந்து நிர்ப்பது ..

எதிர் காலம் கண் முன் 
துகில் உரிக்கபட்ட்டுவிட்டது 
எந்த கர்ணன் இன்று இருக்கின்றான் 
ஓடி வந்து உதவி செய்ய ...
மனதுள் எழுந்த மலை போன்ற கேள்விகளும் 
கரும் பூதம் என மிரட்ட 
ஓர் அடி எடுத்து வைத்தவன் 
நின்று நிதானித்து சொன்னான் 
இன்றோடு என் வேலை முடியலாம் 
உலகம் முடியபோவதில்லை ..

குளிர்



விடிந்தும் விடியாத பொழுது 
கடும் குளிருக்கு அஞ்சியோ என்னவோ 
இருளை போர்வையாக்கி 
வெளி வர தயங்கி பதுங்குகிறது 
எவளவு மன தைரியத்தையும் 
எளிதில் உடைக்க கூடிய 
எகுவைகூட வெகுவாக பாதிக்கும் 
எலும்பை உருக்கும் 
குளிர் காலை ...


எட்டி பார்த்தால்  
எவளவு சுறு சசுறுப்பு 
புலராத பொழுதுகளிலும் 
தம் கடமைகளை தேடி 
ஈசல் போல் பறக்கும் மக்கள் 
நன்கு பழுத்த பலா பழத்தை 
சாக்கு கொண்டு சுற்றியதுபோல் 
எழில் மங்கையர் தோற்றம் .
ஆளை அடிக்கும் குளிருக்குள் 
அழகு பார்க்க யாரும் தயாரில்லை ..


நம் நாட்டவர்க்கு என்றுமே ஒரு வியப்பு 
இந்நாட்டவர் எப்படி ஒன்றி அலைகின்றார் என்று 
இப்படி குளிர் எனின் ... 
அவசரத்து உதவும் கணப்பு  இணை தானே ..
அன்பில் ஒன்றலா ... அவசியத்தின் ஒன்றலா 
ஒன்றியவர் கண்டிலர் ...


கொடும் கதிர் பகலவனும் 
கொஞ்சமும் தயக்கமின்றி 
ஓடி மறைந்து கொள்ளும் 
உறை  பனிக்காலம் 
உருகும் கடும் காலம் ...
இருள்கவிந்து 
குளிர் குவிந்து 
பல்லும் கடு கிடுக்கும் 
பத்து ஆடை அணிந்திருந்தாலும் 
ஐயஹோ ... 


எனினும் அழகு ...
பூப்போல .. தேங்காய் பூப்போல 
பூலோக தேவதைகாய் 
வான் மன்னவன் உதிர்க்கும் 
வெண் மல்லி பூ போலே 
மென்மையும் சுத்தமுமான 
பனி பூக்களின் தழுவலை 
ரசிக்காதோர் யாருமல்லர் ....
வெண் பஞ்சு குவியலென 
மென் பஞ்சு இதமென 
குவிந்து கிடக்கும் பனி பூக்களை 
அள்ளி விளையாடுகையில் 
அவர்தம் ஆண்டுகளை மறப்பர் ..


ஆரம்பத்தில் உலக 
அதிசயம்போல் பார்த்தவள்தான் 
இன்றோ ... இந்த நாட்களை கடக்க 
என் பிந்த நாட்டை நாடுகின்றேன் 
வாழ்க்கை தரமென்று உயர்ந்தாலும் 
வனப்பான வாழ்க்கை எனினும் 
என் நாட்டின் 
மர  நிழல்  ஈணும் 
குளிர் தென்றல் போதுமடா ...


தேன் நிலவென்று வந்திடலாம் 
இந்நாட்டின் குளிர் தன்னில் ஒன்றிடலாம் 
பொழுது போக்கென்றால் சம்மதம்தான் 
பொழுதே இங்கென்றால் -வேண்டாமென்று 
என் புலன் ஐந்தும் கெஞ்சுமடா ..