Monday, January 28, 2013

கயல்விழி

 
வான் மகளும்
மஞ்சள் பூசும்
பொன்மாலை வேளை
வண்டுகள் திருடிய
தேன் எல்லாம்
வகை வகையாய் பதுக்கும்
தேன்  மாலை ...
ஆதவனும் வீடு திரும்புவான்
ஆடு மேய்த்த
அருக்கானியும் வீடு திரும்புவாள்
பார்மகளும் மஞ்சள்
போர்வை கொண்டு
பொழுதை மூடுவாள்

கார் குழலில்
பூச்சூடி
கண்ணிரண்டில் மை தீட்டி
கமகமக்கும் அத்தர் இட்டு
கையிரண்டில் வளையல் மாட்டி
காதுகளில் ஜிமிக்கி ஆட
கன்னமதில் வெட்கம் பூக்க
நில மகளும் நாணும்
நீள் விழிகள் தொலை நோக்கும்

வண்டி கட்டி குதிரை பூட்டி
வருவேன் என சொன்னவர்தாம்
வருகின்றாரோ
அன்றில் வெறும்
வண்டினமாகி
மலர் விட்டு மலர் தாவி
மருகும் உளம் காணாது
ஒரு பொழுது தவிக்க விடுவானோ ..

வெறும் அகம் நோக்கின்
அகுது கெஞ்சும்
புறம் நோக்கின்
அகல்கள் கெஞ்சும்
இதழ் நோக்கின்
இனிமை கொஞ்சும்
உன் முகம் நோக்கின்
முழுதும் அஞ்சும்
என் முளுமைகளும் கெஞ்சும் ..

நிலவு கண்டு கூசும் வெண்மை
நினைவு கொண்டு தேடும் பெண்மை
கனவு கண்டு காளையர் பிதற்றும்
கட்டழகி கயல்விழி
தொட்டனைக்க வருவாரோ என
காத்திருக்கும் வேளைதனில்
எட்டி நின்றே வதைதிடுவானோ
இல்லை அருகில் வந்து
அணைத்திடுவானோ  ...?