Sunday, July 15, 2012

ஏன் ...?

 
 
 
ஏன் ...?
எதுவும் புரியவில்லை ..
உனக்காக சுவாசித்தேன்
உன்னையே நேசித்தேன்
இருந்தும் ..
என் மீது ஏன் வெறுப்பு கொள்கிறாய் ...
என் இரவுகள் விடிவதில்லை
உன் உறவுகள் தொடராத போது..
என் உணர்வுகள்
உணர்வதே இல்லை
உன் உதடுகள் தீண்டாத போது ...
என் கனவுக்கு அழைப்பு விடுத்தவனே
காலனுக்கும் அழைப்பு விடு
உன் காதலி துயில் கொள்ள ...
 
 
 

எண்ண சிறகு




 
நீ இல்லாத தனிமைகளில்
உன் நினைவுகளில்தான்
றெக்கை முளைகின்றது
என் எண்ண சிறகடித்து
உன்னை சேர ..
என் தனிமைகளின்
சோகங்களை சொல்ல
எண்ண சிறகுகளே
வண்ண சிறகுகளாய்
உன்னை தேடி ....
 
 
 

காத்திருப்பேன்

 
 
உன் நினைவு சிதறல்களை
கவிதையாக்கி
என் கண்ணீர் துளிகளை
பேனாக்கு மையாக்கி
உன் அலட்சியங்களை
அதில் புதைத்து
அன்பே உனக்காய்
அதில் உறங்கி காத்திருப்பேன்
என்றும் உன்னவளாய் ....