Friday, May 17, 2013

சலன அலைகள்

 
எங்கோ ஒரு துளி
உடையும் ஓசையில்
உன்னை பற்றி படர்திருந்த
என் எண்ண குளத்தின்
சலன அலைகள் வளையங்களாய் ...

அன்று நீ இருந்தாய்
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க
இன்றும் இருக்கிறாய்
வண்ணமிழந்த எண்ணங்களாக ..

எனை கடக்கும்
தென்றலிடம் தேடினேன்
உன் சுவாசங்களை
என்னுள்ளே அவை
புயலாய் வீசிக்கொண்டிருப்பதை அறியாமலே ...

எங்கோ நிலை கொள்ளும்
என் பார்வை வட்டத்துள்
உன் சிரித்த முகம் ,
அது சிலிர்ப்பை ஊட்டினாலும்
உன் இன்னமையை
என்றோ உணர்ந்த இதயம்
இயல்பாகவே துடிக்கிறது .
இருந்தும்
உறை பனிபோல்
மாற்றவும் தயங்கவில்லை .

ஒரு சூரிய பார்வையின்
தீண்டலுக்காய்
தினமும் அது காத்திருக்கிறது
ஏக்கங்களை சுமந்தபடி .