Saturday, October 11, 2014

பொய்த்தூக்கம்..





இரவுகளின் ஈரம் துளைந்து
உறங்கிக் கொண்டிருந்தது
அன்றைய பகல் பொழுது ...
மினுக் மினுக்கென
மழைத்துளிகள்
சாலையோரத்து விளகொளி பட்டு
மினு மினுத்துக் கொண்டிருந்தது ..

திறந்திருந்த ஜன்னல் வழியே
சில்லென்ற காற்றின் கரங்கள்
உடை விலக்கி
உல் நுழைந்து சிலிர்த்துக் கொண்டது ...

படுக்கையின் ஓரத்தில்
பகலின் தனிமை போர்த்திய
ஆடைகள் அனைத்தும்
நெகிழ்ந்து பாதி
விடுதலை கொண்டிருந்தது ..

ஒரு மெல்லிய சர்ப்பத்தின்
அசைவுகளென
அவள் திண்ணிய மேனி
திரண்டு புரண்டவண்ணம் ...

அவன் கண்ணியம் சிதறி
கை கொண்டணைத்து
மெல் இதழ் இணைந்த பொழுதில்
அவள் பொய்த்தூக்கம் களைந்து
மெய் உறவு பூத்து விசித்து பெண்மை ...