Monday, June 18, 2012
ஏங்கும் நான் ..
எத்தனை கொஞ்சல்கள்
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..
உனக்குள் நான் இருப்பேனா
எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...
எத்தனை எதிர்பார்ப்பு
எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும் நான் ..
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..
உனக்குள் நான் இருப்பேனா
எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...
எத்தனை எதிர்பார்ப்பு
எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும் நான் ..
வாழ்வேன் ...
உன்னை விலகிட நினைக்கவில்லை
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...
வா என்று அழைத்திட உரிமை இல்லை
அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...
உன் வார்த்தைகளால்
குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...
வா என்று அழைத்திட உரிமை இல்லை
அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...
உன் வார்த்தைகளால்
குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...
Subscribe to:
Posts (Atom)