Monday, June 18, 2012

சந்தேகம்

உண்மையான காதல்
சந்தேகம் கொள்ளது
சந்தேகம் கொண்டால்
காதலும் வாழாது
வாழாமல் போகுமா என் காதல் ?
என்னை நீ சந்தேகிப்பது
உன்னை சந்தேகிப்பது
ரெண்டுமே ஒன்றுதான் ..
உணர்வாயா என் அன்பே ?



ஏங்கும் நான் ..

எத்தனை கொஞ்சல்கள்
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..

உனக்குள் நான் இருப்பேனா

எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...

எத்தனை எதிர்பார்ப்பு

எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும்
நான் ..



மோட்சம் பெறும்


உன்னிடம் பேசிவிட துடிகின்றேன்
இருந்தும்
என் கண்ணீர் துளிகளே
என் மனதுள்ளே
நான் பூட்டி வைத்ததை
 காட்டி கொடுத்துவிடும்

என் கண்ணீர் கூட
என்னிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
உன்னைப்போல் ..
அதுவும் என்னை
உதாசீன படுத்துகின்றது ...

என் உப்பு துளிகளை
ஒரு முறை சுவைத்துவிடு
என் கண்ணீர் துளிகளும்
மோட்சம் பெறும்


 

நரகம் ...

நீ இல்லாத வாழ்வு
நரகம் ...
அது உனக்கும் தெரியும் ...
உனக்கு சம்மதம் என்றால்
நரகத்திலும் வாழ்ந்திடுவேன் ..

ஓராயிரம் வலிகளை

உள்ளுக்குளே சுமந்து
உதட்டால் சிரிக்கின்றேன்
உனக்காக ...
உணர்ந்தும் வதைப்பயோ
உன்னை தருவாயோ ..'?



வாழ்வேன் ...


உன்னை விலகிட நினைக்கவில்லை
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...

வா என்று அழைத்திட உரிமை இல்லை

அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...

உன் வார்த்தைகளால்

குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...



இரை ஆகிடுவேன் ..


சிறகடித்த பறவை தனை
சிறைப் பிடித்து சென்றவனே
விருப்போடுதான் சிறை அடைந்தேன்
வெறுப்பை நீ உமிழ்வதேனோ...

தினம் ஒரு சிறகாய்

இறகொடித்து போடுகின்றாய்
பறந்திட நினைப்பேன் என்றா ..?
பயம் வேண்டாம்
பாழும் என் உயிர்
பாரில் உள்ளவரை
பருந்தாய் நீ குதறினாலும்
பாவம் கோழி குஞ்சாய்
இரை ஆகிடுவேன் ...