Saturday, July 28, 2012

காத்திருப்பேன்




என்று வருவாய்
எழுதாத உன் காதலை
ஏழை என் இதழ்வழி
என்று எழுதி செல்வாய்
அணையாத அன்போடு
அளவில்லா ஆசைகளோடு
அணுவிலும் உன் துடிப்போடு
உன் அணைப்புக்காக காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன் ..



என்று முடிமோ ...




உன் நினைவில்
ஆடிகொண்டிருகிறது
என் இதயம்
கனமாக கனக்கும்
மணித்துளிகள்
கலையாது இருக்கும்
உன் நினைவுக் கோலங்கள்
உன் கரம் சேர துடிக்கும்
என் ஆசை மேகங்கள்
கருக்கொண்டு பொழிகிறது....
உன்னை சேராமலே
உறைந்துகொண்டிருகின்றேன் நான்
முடிவில்லாத என் வேதனை
என்று முடிமோ ...





வந்துவிடு ..





விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயரில் கலந்த உறவே ....
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்
கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு ....
கனவாய் போன
காதல் உறவின்
கதைகள் சொல்ல வந்துவிடு ....
உன்னை காண ஏங்கும்
கண்கள் அதற்க்கு
கண நேர சுகத்தை தந்துவிடு ..